கிருஷ்ணர் உருவத்திலான என்.டி.ஆர் சிலைக்கு நீதிமன்றம் தடை!

கிருஷ்ணர் உருவத்திலான என்.டி.ஆர் சிலைக்கு நீதிமன்றம் தடை!
S CHANDRA MOULI

எஸ். சந்திர மௌலி (S Chandra Mouli) எஸ். சந்திர மௌலி கடந்த நாற்பதாண்டுகளாக கல்கி குழும பத்திரிகைகளில் எழுதிவரும் மூத்த பத்திரிகையாளர். கல்கி வெளியிட்ட பல்வேறு சிறப்பிதழ்கள், மற்றும் தீபாவளி மலர்கள், தொழில் மலர்கள், விடுமுறை மலர்களுக்காக இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணம் செய்தவர். 2008ல் கல்கி வெளியிட்ட “குஜராத் டுடே” சிறப்பிதகளுக்காக ஒரு வார காலம் குஜராத் முழுவதும் பயணித்து, குஜராத்தின் வளர்ச்சியை நேரில் கண்டு, எழுதியவர். சமூக அக்கறையோடு கல்கி மேற்கொண்ட “மாதம் ஒரு மாவட்டம்” திட்டத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கும் பயணித்து பங்களித்தவர். வாஜ்பாய், வி.பி.சிங் தொடங்கி மன்மோகன் சிங், நரேந்திர மோடி வரை ஏழு இந்தியப் பிரதமர்களை சந்தித்து பேட்டி கண்டவர். எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, என்.டி.ஆர், ஜோதி பாசு, வெங்கையா நாயுடு, நிர்மலா சீதாராமன், சிவாஜி கணேசன், ரஜினி காந்த், கமலாசன், ஜெமினிகணேசன், சூர்யா, மணிரத்னம், கிரிக்கெட்டர் ஸ்ரீக்காந்த், விக்கு வினாயகராம். உமையாள்புரம் சிவராமன், வயலின் கன்யாகுமரி, ஜெயகாந்தன், நாஞ்சில் நாடன், கவிஞர் வைரமுத்து, கவிஞர் மு.மேத்தா, நா. முத்துகுமார், சோ ராமசாமி என பல்துறைப் பிரபலங்களையும் பேட்டி கண்டு எழுதியவர். இயக்குனர் ஸ்ரீதர், நடிகர் நாகேஷ், ஓவியர் கோபுலு, இயக்குனர் எஸ்பி. முத்துராமன், திருமதி ஒய்,ஜி.பி. ஃபிலிம் நியூஸ் ஆனந்தன், நடிகர் ஏ.ஆர்.எஸ். மெஜிக் நிபுணர் லால் உள்ளிட்ட பலரது வாழ்க்கை அனுபவங்களை இவர் தொடராக எழுதி, அவை பின்னர் புத்தகங்களாக வெளியாகி உள்ளன. இயக்குனர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானபோது, இளைய தலைமுறையினருக்கு அமரர் கல்கி பன்முகச் சாதனை வாழ்க்கையை அறிமுகப்படுத்தும் நோக்கத்துடன் “கல்கி-பொன்னியின் செல்வர்” என்ற தலைப்பில் அவரது வாழ்க்கை வரலாற்றை சுவைபட எழுதியவர். பெண்சிசுக் கொலை தொடர்பான கட்டுரைக்கு “லாட்லி விருதும்”, ரோட்டரி சங்கத்தின் “சாதனை விருதும்” பெற்றவர். தற்போது madraspaper இணைய வார இதழில் “ஓரு குடும்பக் கதை: என்ற தலைப்பில் இந்திய அரசியலில் நேரு குடும்பத்தின் பங்களிப்பு குறித்த நெடுந்தொடர் ஒன்றை எழுதி வருகிறார். சோ குறித்த ஒரு புத்தகத்தை எழுதிக் கொண்டிருக்கிறார்.

Updated on

மறைந்த ஆந்திர முதலமைச்சரும், தெலுங்கு சினிமா உலகின் அன்றைய சூப்பர் ஸ்டாருமான என்.டி.ராமராவின் நூற்றாண்டு விழா தெலங்கானாவில் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தின் ஓர் அங்கமாக தெலங்கானா மாநிலத்தில் உள்ள முக்கிய நகரமான கம்மம் நகரத்தில் உள்ள ஏரிக்கரைப் பகுதியில் என்.டி.ஆருக்கு ஒரு பிரம்மாண்டமான சிலையை நிறுவுவதற்கான இறுதிக் கட்டப் பணிகள் முடிவடைந்து வரும் 28ஆம் தேதி திறப்பு விழாவுக்குத் தயார் நிலையில் உள்ளது. சிலைத் திறப்பு விழாவுக்கு சிறப்பு விருந்தினர் ராஜ மௌலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர். படத்தின் மூலமாக சர்வதேசப் புகழ் பெற்ற ஜூனியர் என்.டி.ஆர்.

கம்மம் நகரத்தின் ஏரிக்கரைப் பகுதியில் நிறுவப்பட்டுள்ள என்.டி.ஆரின் சிலை 54 அடி உயரம் கொண்டது. அயல்நாட்டில் வசிக்கும் இந்தியர்கள், தொழிலதிபர்கள், மற்றும் பலரும் அளித்த இரண்டு கோடியே முப்பது லட்சம் ரூபாய் நன்கொடையில் இந்தச் சிலை நிறுவப்படுகிறது. நிஜாமாபாத் நகரச் சேர்ந்த வர்மா என்ற சிற்பி இந்தச் சிலையை உருவாக்கி இருக்கிறார்.

ஆனால், அந்தச் சிலை நிறுவுவதற்கு ஒரு சாரர் கடுமையான எதிர்ப்பினைத் தெரிவித்து, சிலைக்குத் தடை கோரி தெலங்கானா உயர்நீதி மன்றத்தினை அணுகினார்கள். சர்ச்சைக்குக் காரணம், நூற்றாண்டு விழா நாயகரான என்.டி.ஆருக்கு சிலை வைக்கக் கூடாது என்பதல்ல. அந்தச் சிலை, 1967ல் என்.டி.ஆர். நடித்து வெளியாகி பிரம்மாண்டமான வெற்றி பெற்ற திரைப்படமான கிருஷ்ணாவதாரம் என்ற திரைப்படத்தில் என்.டி.ஆர். ஏற்று நடித்த கிருஷ்ணர் உருவத்திலான என்.டி.ஆர். சிலை என்பதில்தான்.

யாதவ சங்கம், இஸ்கான் உள்ளிட்ட சில அமைப்புகள்தான் கிருஷ்ணாவதார என்.டி.ஆர். சிலைக்கு எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதி மன்றத்தை அணுகினார்கள். என்.டி.ஆர். கிருஷ்ணர் வேடத்தில் தோன்றி மக்களைக் கவர்ந்தார் என்றாலும், கிருஷ்ணாவதாரத் தோற்றத்தில் அவரது சிலையை வைப்பது, கிருஷ்ண பக்தர்களின் மனதைப் புண்படுத்தும் என்பது அவர்கள் தரப்பு வாதம்.

தெலங்கானா உயர் நீதி மன்றம் கிருஷ்னாவதார என்.டி.ஆர். சிலைக்கு விதித்த தடையை ஏற்று, சிலை நிர்மாணக் குழுவினர், “ கிருஷ்ணரின் கருநீல நிறத்துக்கு பதிலாக தங்க நிறத்தில் சிலை இருக்கும். மேலும், கிருஷ்ணருகு உரிய விஷ்ணு சக்கரம் போன்ற அம்சங்கள் நீக்கப் படும். , திட்டமிட்டபடி மே மாதம் 28 ஆம் தேதி சிலை திறப்பு விழா நடைபெறும்!” என அறிவித்துள்ளனர்.

logo
Kalki Online
kalkionline.com