கார் விபத்தில் சிக்கி கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் பலத்த காயம்!

ரிஷப் பந்த்
ரிஷப் பந்த்
Updated on

இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பந்த் இன்று அதிகாலையில் பயணித்த கார் விபத்துக்குள்ளாகி, அவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் இன்று அதிகாலையில்  காரில் டெல்லி - டேராடூன் நெடுஞ்சாலையில் பயணம் செய்தபோது, சாலைத் தடுப்பில் கார் மோதி விபத்தில் சிக்கியது.

அதையடுத்து கார் தீப்பிடித்து எரியத் தொடங்க, ரிஷப் பந்த்திற்கு தலை மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரி மீட்டு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை கொடுக்கப் பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com