

தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெறாமல் அச்சடிக்கப்படும் எந்தவித கூப்பன், துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகம் செய்யக்கூடாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி செயல்பட்டால் வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது. 127 மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளது.
திமுகவின் தேர்தல் வாக்குறுதியான ரூ.8,000 கூப்பன் மாதிரியை வாக்காளர்களுக்கு வழங்க தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இம்மாதிரியான கூப்பன்களை வழங்குவதற்கு தேர்தல் ஆணையத்திடம் யாரும் அனுமதி பெறவில்லை என்றும், தமிழகம் முழுவதும் இம்மாதிரியான கூப்பன்கள் வழங்கப்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் கூறியுள்ளது.