நீரில் ஆக்சிஜன் பற்றாக்குறையே மீன்கள் இறப்புக்கு காரணம் - அமைச்சர் ராஜிவ்..!

எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் டன் கணக்கில் மீன்கள் சாவு!: வாழ்வாதாரமிழந்த 8,000 மீனவ குடும்பங்கள் - நச்சுக் கழிவுகளா? மனிதக் கழிவுகளா?
அமைச்சர் ராஜிவ்
அமைச்சர் ராஜிவ்source:twitter
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

எண்ணூர் முகத்துவாரத்திற்கு அருகில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 15) முதல் டன் கணக்கில் மீன்களும், பிற நீர்வாழ் உயிரினங்களும் செத்து கரை ஒதுங்கி வருகின்றன. பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக நீர்வழியில் கலந்த, அதிக மாசுபட்ட தொழிற்சாலைக் கழிவுகளே இந்த இறப்புகளுக்குக் காரணம் என்று மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். சென்ற சனிக்கிழமை காலை முதல் மீன்கள் செத்து மடிவது குறித்த தகவல்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில், காட்டுக்குப்பம் அருகே உள்ள பக்கிங்ஹாம் கால்வாயில் தொடங்கி, வடசென்னை அனல் மின் நிலையம் வரை, நீர்வழியில் சுமார் 6-7 கிலோ மீட்டர் தூரத்திற்கு மீன்கள், இறால்கள் மற்றும் நண்டுகள் போன்ற உயிரினங்கள் செத்து மிதக்கின்றன என்று மீனவர்கள் தெரிவித்தனர்.

இதனால் எண்ணூரைச் சுற்றியுள்ள 8 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 8,000க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக முடங்கியுள்ளது. தொழிற்சாலைகளின் நச்சுக் கழிவுகளே இதற்குக் காரணம் என்று கூறி அப்பகுதி மீனவர்கள் தாழங்குப்பம் நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அமைச்சர் ராஜிவ்
அமைச்சர் ராஜிவ்source:twitter

சென்னையின் ஜீவாதாரமாக விளங்கும் வடசென்னை கொசஸ்தலை ஆறு மற்றும் அதன் முகத்துவார பகுதிகள், தொழிற்சாலை கழிவுகள் கலப்பதால் தொடர்ந்து மாசடைந்து வருகின்றன. ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பது வாடிக்கையாகி விட்டதால் அப்பகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் இறால் நண்டு அதிகமாக இருந்த ஏரி இது. எனவே கொசஸ்தலை ஆற்றுப்பகுதியை சூழலியல் மண்டலமாக அறிவித்து, அரசு உடனடியாக தலையிட்டு தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியுள்ளார்.

வட சென்னையில் இருக்கும் ரசாயன ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரால் இந்த ஆறு பாதிக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் பாதிப்புக்கு காரணமான நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க தனி விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று பாமக எம்எல்ஏ கணேஷ்குமார் வலியுறுத்தியுள்ளார்.

எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் டன் கணக்கில் மீன்கள் செத்து மிதப்பது தொழிற்சாலை கழிவுகளால் ஏற்பட்டது என்று மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் இது தொழிற்சாலைக் கழிவுகளால் அல்ல, என்றும் ஆய்வுகள் மூலமாக பக்கிகிங்காங் கால்வாய் பகுதிகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக மீன்கள் இறந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக ஒரு லிட்டர் நீரில் கரையக்கூடிய ஆக்சிஜன் 4 மில்லிகிராமுக்கு மேல் இருக்க வேண்டும். ஆனால் அங்கு இரண்டு மில்லிகிராம் தான் இருந்தது. மனிதக் கழிவுகள் நீரில் கலந்ததே ஆக்சிஜன் குறைந்ததற்கு காரணம் என கண்டுபிடிக்கப்பட்டது.

எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் இறந்து மிதந்ததற்கு தொழிற்சாலைக் கழிவுகள் காரணமல்ல. மனிதக் கழிவுகள் உட்பட கழிவு நீர் கலப்பு காரணமாக உயிர் இழந்திருக்கலாம் எனத் தெரிய வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும், 10 நாட்களுக்குள் விரிவான அறிக்கை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் சட்டப்பேரவையில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜீவ் பதில் அளித்துள்ளார்.

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் ஆற்றின் நீர் மற்றும் இறந்த மீன்களின் மாதிரிகளை சேகரித்து ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர். ஆற்றில் ரசாயனத் தாக்கம் இருக்கலாம் என்பதால், இப்பகுதியில் பிடிபடும் அல்லது இறந்து கிடக்கும் மீன்களை பொதுமக்கள் எக்காரணம் கொண்டும் உணவாக பயன்படுத்த வேண்டாம் என்று கடல் அறிவியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்:
தண்ணீரில் மிதக்கும் அதிசயம்: 600 ஆண்டுகள் கடந்தும் கம்பீரமாக நிற்கும் இத்தாலியின் வெனிஸ் நகரம்!
அமைச்சர் ராஜிவ்
logo
Kalki Online
kalkionline.com