வந்தது புதிய அப்டேட்: தகுதி இருந்தாலும் இனி மேல் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க முடியாது..!

மகளிர் உரிமை தொகை விண்ணப்ப படிவம்
மகளிர் உரிமை தொகை விண்ணப்ப படிவம்
Published on

இந்தியாவில் இன்றும் கூட பல இல்லத்தரசிகள் அன்றாட செலவுகளுக்குக் கூட பிறரை சார்ந்திருக்க வேண்டிய நிலையே உள்ளது. எனவே, இத்தகைய நிலையை போக்கி பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழி வகுத்துக் கொடுப்பதற்காக தமிழ்நாடு அரசு கொண்டு வந்த திட்டம் தான் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்(Kalaignar Magalir Urimai Thogai).

இந்த திட்டத்தின் மூலம் குடும்ப ஆண்டு வருமானத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் குடும்ப தலைவிகளுக்கு அவர்களது வங்கி கணக்கில் மாதந்தோறும் 15-ம் தேதி ரூ.1000 பணம் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது.இந்த திட்டத்தில் தற்போது ஒரு கோடியே 14 லட்சம் பெண்கள் பயனாளிகளாக உள்ளனர். இந்த உரிமைத்தொகை இதுவரை கிடைக்காத தகுதி வாய்ந்த மகளிர் அனைவருக்கும் வழங்க அரசு முயற்சி எடுத்தது.

இதற்காக மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுப்பட்டவர்களுக்கு உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலம் மாநிலம் முழுவதும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அனைத்தும் சரிபார்க்கப்பட்டு விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களை தேர்வு செய்யும் பணிகள் முழுவீச்சில் நடக்கின்றன.

இந்நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் பெண்களிடம் இருந்து புதிய விண்ணப்பங்கள் பெறுவதை நிறுத்திக் கொண்டது தமிழ்நாடு அரசு.

ஏனெனில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் மூலம் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்திருந்த நிலையில், கடந்த நவம்பர் 14-ம் தேதியுடன் இந்த முகாம்கள் அனைத்து மாவட்டங்களிலும் அதிகாரப்பூர்வமாக முடிவடைந்து விட்டது. இதுவரை, மாநிலம் முழுவதும் 28 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் மகளிர் உரிமைத்தொகை கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.

நவம்பர் மாத இறுதிக்குள் தேர்வு செய்யப்பட்ட மற்றும் தேர்வு செய்யப்படாத பயனாளிகளின் விவரங்கள் அவர்களது மொபைல் நம்பருக்கு மெசேஜ் அனுப்பப்படும் என தெரிகிறது.

நவம்பர் மாத இறுதிக்குள் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கும் மற்றும் தேர்வு செய்யப்படாத பயனாளிகளுக்கும் அரசிடமிருந்து மெசேஜ் வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதன்பிறகு, டிசம்பர் 15-ம் தேதி முதல் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்ட பெண்களின் வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
கலைஞர் மகளிர் உரிமை தொகை எப்போது கிடைக்கும்.? வெளியான முக்கிய அப்டேட்...!
மகளிர் உரிமை தொகை விண்ணப்ப படிவம்

எனவே மகளிர் உரிமை தொகை பெற தகுதி இருந்தும் விண்ணப்பிக்காத பெண்கள் மற்றும் விண்ணப்பிக்க தவறியவர்கள் இனி அரசின் மறு அறிவிப்பு வரும் வரை காத்திருக்க வேண்டியது தான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com