ஏப்ரல் 10ம் முதல் 28ம் தேதிக்குள் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும்! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

பள்ளி
பள்ளி

முதல் வகுப்பு முதல் 9 வது வகுப்பு வரை உள்ள மாணவ மாணவியருக்கு ஏப்ரல் 10ம் தேதியிலிருந்து ஏப்ரல் 28ம் தேதிக்குள் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இது குறித்து பலவேறு அறிவிப்புகளை தற்போது வெளியிட்டுள்ளது.

12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த 3ம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நேற்று தொடங்கியது. இந்நிலையில் 4ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான தேர்வுகளை ஏப்.28ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், அனைத்து அரசு,அரசு உதவிபெறும் தொடக்க , நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 2022-2023 ஆம் கல்வியாண்டு அரசுப் பொதுத் தேர்வுகள் தவிர்த்து மற்ற வகுப்புகளில் பயிலும் மாணவ , மாணவியர்களுக்கு மூன்றாம் ஆண்டு இறுதித் தேர்வு நடத்துவது குறித்து பின்வரும் அறிவுரைகள் வழங்கப்படுகிறது.

எண்ணும் எழுத்தும் மூன்றாம் பருவத் தேர்வு 1 முதல் 3ம் வகுப்புகளுக்கு 17.04.2023 முதல் 21.04.2023 வரையும், 4 மற்றும் 5 வகுப்பு மாணவர்களுக்கு மாவட்டங்கள் தங்களுடைய உள்ளூர் நிலைக்குத் தகுந்தவாறு தேர்வு நாட்களை ஏப்ரல் 10ம் தேதியிலிருந்து ஏப்ரல் 28ம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும் . 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு, மாவட்டங்கள் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு மற்றும் தங்களுடைய உள்ளூர் நிலைக்குத் தகுந்தவாறு தேர்வு நாட்களை ஏப்ரல் 10ம் தேதியிலிருந்து ஏப்ரல் 28ம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும்.

இம்மாத இறுதியில் நடைபெறும் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தில், ஆசிரியர், பெற்றோர்களிடம் அவர்தம் குழந்தைகளின் வருகை, கற்றல்நிலை, உடல்நலம், மனநலம், கல்வி இணைச் செயல்பாடுகள், கல்விசாரா செயல்பாடுகள் என பள்ளியின் அனைத்து நடவடிக்கைகளையும் விவாதிப்பதுடன், கற்றல் அடைவு சார்ந்த நடவடிக்கைகள் குறித்த தகவலையும் தெரிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com