அச்சச்சோ..! அடுத்த 25 ஆண்டுகளில் ‘வெள்ளி’யின் விலை இதுதான்! அடித்து சொல்லும் நிபுணர்கள்..!

தங்கத்திற்கு இணையாக வெள்ளியின் விலையும் உயர்ந்து வருவதால், அடுத்த 25 ஆண்டுகளில் ‘வெள்ளி’யின் இதுவாகத்தான் இருக்கும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.
Silver Investment
Silver Investment
Published on

இந்தியாவில் தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக ராக்கெட் வேகத்தில் கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில், வெள்ளி விலையும் அதனோடு சேர்ந்து வரலாறு காணாத வகையில் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கடந்த 4 நாட்களாக வெள்ளியின் விலை குறைந்து வந்த நிலையில் நேற்று(அக்டோபர் 22-ம்தேதி) ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.175-க்கும், 1 கிலோ பார் வெள்ளி 1 லட்சத்துக்கு 80 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதுவே கடந்த வாரங்களில் ஒருகிராம் வெள்ளியின் விலை ரூ.200 தாண்டி விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2023-ல் ஒரு கிலோ வெள்ளி ரூ.63,000-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், நேற்று (அக்டோபர் 22-ம்தேதி)ரூ.1.80 லட்சத்தை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை சுமார் ₹71.50 ஆக இருந்தது.

தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்து வருவதால், அதற்கு மாற்றாக வெள்ளியில் முதலீடு செய்ய மக்கள் அதிக ஆர்வம் காட்டுவதே இதற்குக் காரணம் என்று தமிழக நகை வியாபாரிகள் சம்மேளனம் கூறியுள்ளது. இதனால் தங்கத்தை விட வெள்ளியில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதையும் படியுங்கள்:
தங்கத்தை விடுங்க...இனி வெள்ளி தான் லாபம்...கடைகளில் விற்றுத் தீர்ந்த வெள்ளி கட்டிகள்..!
Silver Investment

இந்தியாவில் நடுத்தர மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் தங்கத்தைவிட வெள்ளி கட்டிகள் மற்றும் வெள்ளி நகைகளை வாங்க ஆா்வம் காட்டுகின்றனா். வெள்ளியின் விலை வரும் ஆண்டுகளில் தொடர்ந்து உயரும் என்பதால் நீண்ட கால முதலீட்டிற்கு வெள்ளியில் முதலீடு செய்வது லாபகரமாக இருக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

தற்போதைய நிலவரப்படி, அண்மைக் காலமாக தொழிற்சாலைகளில் வெள்ளியின் பயன்பாடு அதிகரித்து வருவதால், அதன் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையாக உயா்ந்து வருவதாக கூறப்படுகிறது.

அந்த வகையில், உலகளவில் தொழில் துறை பயன்பாட்டிற்கான வெள்ளியின் தேவை அதிகரிப்பதே விலை உயா்வுக்கு காரணம் என துறை சாா்ந்தவா்களின் கருத்தாக உள்ளது. அதாவது, தொழில்துறையில் சூரிய மின்தகடு(Solar Panels), லித்தியம் பேட்டரி, மின்சார வாகனங்கள், மின்கம்பிகள், கைப்பேசிகள், கணினிகள், செயற்கை நுண்ணறிவு சாதனங்கள் என அனைத்து வகையான மின் மற்றும் மின்னணு சாதனங்களில் வெள்ளியின் பயன்பாடு அதிகரித்துள்ளதால் தேவை அதிகரித்து வெள்ளியின் விலையும் உயா்ந்து வருகிறது என்கின்றனர்.

அதேபோல் உலகளவில் இந்தியா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் தொழிற்சாலை பயன்பாட்டுக்காக வெள்ளியை அதிகளவில் கொள்முதல் செய்து வருகின்றன. 2023-ல் சூரிய மின்தகடு (சோலாா்) துறையில் வெள்ளியின் பயன்பாடு 142 மில்லியன் அவுன்ஸாக இருந்த நிலையில், 2024-ல் அதுவே 197.6 மில்லியன் அவுன்ஸாக உயா்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதாவது, ஒரே ஆண்டில் சுமாா் 40 சதவீதம் அதிகரித்துள்ளதாக துறை சாா்ந்தவா்கள் கூறுகின்றனா்.

அதேபோல், சோலாா் ஆற்றல் விரிவாக்கம், மின்சார வாகனங்கள் மற்றும் மின்சார கட்டமைப்பு வளா்ச்சி உள்ளிட்ட காரணங்களால் அடுத்த 3 ஆண்டுகளில் தொழில் துறையில் வெள்ளி நுகா்வு 7 முதல் 12 சதவீதம் வரை உயரும் வாய்ப்பு உள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

பொதுவாக, தங்கம் மற்றும் வெள்ளி விலைகளை கணிப்பது கடினம் என்றாலும், தற்போதைய சந்தை போக்குகள் மற்றும் நிபுணர் பகுப்பாய்வின் அடிப்படையில் பார்த்தால், வரும் காலங்களில் தங்கத்திற்கு இணையாக வெள்ளியின் விலை கணிசமாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவே கூறப்படுகிறது.

அந்த வகையில், நிபுணர்களின் கணிப்புகளின்படி, 2040-50 காலக்கட்டத்தில் வெள்ளியின் மதிப்பு கோடிகளை எட்டுவதற்கும் அதிக சாத்திய கூறுகள் உள்ளதாகவும் கூறுகின்றனர். சில நிபுணர்களின் கூற்றுப்படி, அடுத்த 20, 25 ஆண்டுகளில் 5 கிலோ வெள்ளியின் விலை ரூ.1 கோடி மதிப்புடையதாக மாறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதால், முதலீட்டாளர்கள் புத்திசாலித்தனமாக முதலீடு செய்தால் பயனடையலாம் என்று கூறுகின்றனர்.

இதையும் படியுங்கள்:
வெள்ளி விலை உயர்வுக்கு இதுதான் காரணமா? இந்திய அரசாங்கம் ஏன் இந்த விசித்திர முடிவை எடுத்தது?
Silver Investment

தங்கத்தைப் போலவே, வெள்ளியும் கடினமான காலங்களில் நிதிப்பாதுகாப்பை வழங்குகிறது. இதனால் நீங்கள் இன்னும் வெள்ளி ETF-களில் முதலீடு செய்யத் தொடங்கவில்லை என்றால், இப்போதே தொடங்குவது நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com