ஒரே நாளில் லட்சக்கணக்கில் சம்பாதித்த மீனவர்… கடலில் கிடைத்த அற்புதங்கள்!

Fisher man
Fisher man
Published on

ராமநாதபுரத்தில் ஒரு மீனவருக்கு சுமார் 5 டன் எடை கொண்ட பாறை மீன்கள் சிக்கியுள்ளன. இதனால், ஒரே நாளில் பல லட்சம் ரூபாயை சம்பாதித்து அசத்தியுள்ளார்.

திருவாடானை அருகே உள்ள தொண்டி- புதுக்குடி மீனவ கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் என்ற மீனவர், வழக்கம்போல் தனது நாட்டுப்படகில் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றிருக்கிறார். அப்போது சற்றும் எதிர்பாராவிதமாக சுமார் 5 டன் எடை கொண்ட பெரிய பாறை மீன்கள் வலையில் சிக்கின.

சாதாரணமாக இவ்வளவு பெரிய அளவில் பாறை மீன்கள் கிடைப்பது மிகவும் அரிது. கண்ணனின் வலையில் மீன்கள் அதிக எடையுடன் சிக்கியதை அவர் உணர்ந்ததும், உடனடியாக அருகில் மீன்பிடித்துக்கொண்டிருந்த சக மீனவர்களை உதவிக்கு அழைத்திருக்கிறார். அவர்களின் உதவியுடன், மூன்று நாட்டுப்படகுகளைப் பயன்படுத்தி, வலையில் சிக்கியிருந்த அனைத்து மீன்களையும் மிகுந்த சிரமத்திற்கிடையே பிடித்து கரைக்குக் கொண்டு வந்து சேர்த்துள்ளனர்.

இதுபோன்ற மீன்கள் நாட்டுப்படகில் செல்லும் மீனவர்களுக்கு கிடைப்பது மிகவும் அரிதே. பொதுவாக ஆழ்கடலுக்கு விசைப்படகில் செல்லும் மீனவர்கள் வலையில் மட்டுமே இவை சிக்கக்கூடியவை.

இதையும் படியுங்கள்:
வெற்றி பெற்ற மனிதர்கள் காலை எட்டு மணிக்கு முன்பாக செய்யும் 10 விஷயங்கள் என்னென்ன?
Fisher man

கரைக்கு வந்த மீன்களைக் கண்டதும் மீனவர் கிராமமே ஆச்சரியத்தில் மூழ்கியது. சுமார் 5 டன் எடை கொண்ட இந்த பிரம்மாண்ட பாறை மீன்களின் மதிப்பு சுமார் 15 லட்சம் ரூபாய் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மீன்கள் கரைக்கு வந்ததும், அவற்றை வாங்க வியாபாரிகள் போட்டி போட்டுக்கொண்டு குவிந்தனர். கண்ணன் ஒரே நாளில் பல லட்சம் ரூபாய்க்கு மீன்களை விற்று, லட்சாதிபதியானார்.

இந்த சம்பவம் ராமநாதபுரம் பகுதி மீனவர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியையும், ஊக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கடல்வளம் இன்னும் குறையவில்லை என்பதையும், உழைப்புக்கு ஏற்ற பலன் நிச்சயம் கிடைக்கும் என்பதையும் கண்ணனின் அனுபவம் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. இந்த சம்பவம் மீனவர் கண்ணனின் குடும்பத்தில் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த மீனவர் சமூகத்திலும் ஒரு புதிய நம்பிக்கையை விதைத்துள்ளது.

பொதுவாக, கடல் தொழில் என்பது நிச்சயமற்றது. சில நாட்கள் லாபம் இருக்கும், சில நாட்கள் நஷ்டம் ஏற்படும். இத்தகைய சூழலில், கண்ணனுக்கு கிடைத்த இந்த எதிர்பாராத பெரிய லாபம், அவர் வாழ்வில் ஒரு மாபெரும் திருப்புமுனையாக அமைந்துள்ளது. இந்த நிகழ்வு ராமநாதபுரம் பகுதி மீனவ சமூகத்தில் பேசுபொருளாகியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com