

அமெரிக்கா - ஈரான் போர் தாக்கத்தால் தங்கம் விலை பெரியளவில் அடி வாங்கியது. தற்காலிகமாக போரை நிறுத்த இரு நாடுகளும் ஒப்புகொண்ட நிலையில், தங்கம் விலை மீண்டும் எகிற தொடங்கியது. இதனால் கடந்த ஆண்டை போன்றே இந்த ஆண்டும் தங்கம் விலை புதிய உச்சத்தை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்., 30) சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்துள்ளது.இன்று காலை விலைமாற்றமின்றி நேற்றைய அதே விலையில் விற்கப்பட்டு வந்த நிலையில், சற்று முன் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.200 உயர்ந்து ரூ.14,100-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து ரூ.112,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை நேற்று மாற்றமின்றி ஒரு கிலோ ரூ.2,65,000க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.270-க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.10,000 உயர்ந்து ரூ.2,70,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது