20 நிமிடங்களில் மெட்ரோவில் கொண்டுவரப்பட்ட இதயம்: பெங்களூருவில் நடந்த அதிசயம்!

Heart transplantation
Heart transplantation
பாரதி

Hii… I am Kavi Bharathi. Working as a Content Writer in the name Bharathi. Experiencing in Writing and Social Media Handling. And probably writing in News, Sports News, Cinema News, Art/Culture, Beauty/Fashion. Working hard to grab your attention through my contents. I will try my best to fulfill your expectations.

Updated on

பெங்களூரில் போக்குவரத்து நெரிசலால் மனித இதயத்தை மாற்றி, உயிர் காக்கும் முறையில் பெரிய சவால் ஏற்பட்டது. இதனால், இதயத்தை மெட்ரோ மூலம் கொண்டு வந்து ஒரு உயிரைக் காப்பாற்றியிருக்கிறார்கள். இதன்மூலம் மெட்ரோ ரயில் சேவை ஒரு போக்குவரத்து சேவை மட்டுமில்லாமல் உயிர்காக்கும் சேவையாகவும் மாறியிருக்கிறது.

பெங்களூருவின் ஒரு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நோயாளிக்கு அவசரமாக இதயம் மாற்று அறுவை சிகிச்சை தேவைப்பட்டது. இன்னொரு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த ஒருவரின் இதயம் தானமாகப் பெறப்பட்டது. அந்த இதயம் அறுவை சிகிச்சைக்காக குறிப்பிட்ட நேரத்திற்குள் கொண்டுசெல்லப்பட வேண்டும். இல்லையென்றால், அது வீணாகிவிடும் என்ற நிலை ஏற்பட்டது.

சாதாரணமாக, இந்த மருத்துவமனைகளுக்கு இடையே பயணம் செய்ய ஒரு மணி நேரத்திற்கும் மேலாகும். ஆனால், இந்த உயிர்காக்கும் பயணம் வெறும் 20 நிமிடங்களில் வெற்றிகரமாக நிறைவுற்றது. இதயம் கொண்டுசெல்லப்படும் தகவல் உடனடியாக மெட்ரோ ரயில்வே கார்ப்பரேஷன் (BMRCL) அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் எந்தத் தயக்கமும் இன்றி, விரைவான போக்குவரத்துக்கான ஏற்பாடுகளைச் செய்தனர்.

உயிர்காக்கும் இந்த உறுப்பை எடுத்துச் சென்ற மருத்துவக் குழுவினர், யஷ்வந்த்பூர் மெட்ரோ நிலையத்தில் இருந்து ஒரு சிறப்புப் பாதுகாப்புடன் புறப்பட்டனர். பெங்களூரு மெட்ரோ ரயில்வே கார்ப்பரேஷன் (BMRCL) உதவி பாதுகாப்பு அதிகாரி ஹொன்னே கவுடாவின் மேற்பார்வையில், மெட்ரோ ரயில் ஏழு நிலையங்களைக் கடந்து, குறிப்பிட்ட நேரத்திற்குள் சாம்ராஜ்யம் சதுக்கம் மெட்ரோ நிலையத்தை அடைந்தது.

இதையும் படியுங்கள்:
உங்கள் வீட்டில் எலுமிச்சை புல் வளர்ப்பது எப்படி?
Heart transplantation

இந்தச் செயல், பெங்களூரு மெட்ரோ வெறும் ஒரு போக்குவரத்து சாதனம் மட்டுமல்ல, அது ஒரு உயிர்காக்கும் கருவி என்பதையும் நிரூபித்தது. இதுபோன்ற மனிதாபிமான செயல்களில் மெட்ரோ நிர்வாகம் ஈடுபடுவது இது முதல் முறையல்ல. ஆகஸ்ட் 1 ஆம் தேதி, ஒரு தானம் செய்யப்பட்ட கல்லீரலை கொண்டுசெல்லவும் மெட்ரோ நிர்வாகம் உதவியது.

இந்த நிகழ்வுகள், அவசர மருத்துவ தேவைகளுக்கு, மெட்ரோ போன்ற பொது போக்குவரத்து அமைப்புகள் எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும் என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். பெங்களூரு மக்களின் பெருமையையும், மனிதநேயத்தின் மீதான நம்பிக்கையையும் இந்த நிகழ்வு மேலும் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த உயிர்காக்கும் பயணத்தில் பங்காற்றிய அனைவருக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

logo
Kalki Online
kalkionline.com