‘இந்து மதம் என்பது ஒரு வாழ்வியல் நெறிமுறை:’ உச்ச நீதிமன்றம்!

‘இந்து மதம் என்பது ஒரு வாழ்வியல் நெறிமுறை:’
உச்ச நீதிமன்றம்!

மூத்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் கடந்த மாதம் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில் அவர், ‘நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் முடிந்து விட்டன. இந்நிலையில், குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் உள்ள, ‘முகல் கார்டன்’ அண்மையில்தான், ‘அம்ரித் உத்யன்’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.  ஆனால், நம் நாட்டில் உள்ள பழைமையான, வரலாற்று சிறப்பு மிக்க கலாசாரத்தை பிரதிபலிக்கும் பல இடங்கள் இன்னமும் வெளிநாட்டு ஊடுருகல்காரர்கள், அவர்களுடைய வேலைக்காரர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயர்களிலேயே உள்ளன. இது நமது இறையாண்மை மற்றும் அரசியல் சாசனம் வழங்கி உள்ள பல உரிமைகளுக்கு எதிரானது ஆகும். எனவே வெளி நாட்டு ஊடுருவல்காரர்களால் மாற்றப்பட்ட பெயர்களை அதன் அசல் பெயரில் மாற்றுவதற்கான ஒரு ஆணையத்தை அமைக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். பல இடங்களின் அசல் பெயர்களை கண்டறிந்து வெளியிடுமாறு தொல்லியல் துறைக்கு உத்தரவிடலாம்’ என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கே.எம்.ஜோசப் மற்றும் பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், ‘இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. நீதிமன்றமும் மதச்சார்பற்ற அமைப்பு. அரசியல் சாசனத்தின் அனைத்துப் பிரிவுகளையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது. இந்து என்பது ஒரு மதம் அல்ல. அது ஒரு வாழ்வியல் நெறிமுறை. அதனால்தான் நாம் அனைவரும் ஒற்றுமையாக வாழ்கிறோம். கடந்த கால வரலாறுகளை தோண்டாதீர்கள். அவ்வாற செய்தால் நாட்டின் ஒற்றுமை சீர்குலையும். நாட்டின் அமைதியை சீர்குலைக்கக் கூடாது. மக்களை பிரித்து ஆட்சி செய்வது பிரிட்டிஷாரின் கொள்கை. அந்த நிலை மீண்டும் உருவாகக் கூடாது’ என்று அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com