நாளை முதல் அஞ்சல் சேவைகளை நிறுத்தும் இந்தியா..!

Indian post
Indian post
Published on

இந்தியா, அமெரிக்காவிற்கான அஞ்சல் சேவைகளை ஆகஸ்ட் 25 முதல் தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது. அமெரிக்காவில் ஆகஸ்ட் மாத இறுதியில் அமலுக்கு வரும் புதிய சுங்க விதிகள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்ய எண்ணெயை வாங்கியதற்காக இந்தியா மீது 25% வரி மற்றும் அபராதமாக கூடுதல் 25% வரி விதித்ததை அடுத்து, இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகப் பதட்டங்கள் நிலவி வருகின்றன.

அஞ்சல் துறை சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ஆகஸ்ட் 29 முதல், அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் அனைத்து சர்வதேச அஞ்சல் பொருட்களுக்கும், அதன் மதிப்பு எதுவாக இருந்தாலும், அந்த நாட்டுக்குரிய சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டத்தின் (IEEPA) கீழ் சுங்க வரி விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

ஜூலை 30, 2025 அன்று வெளியிடப்பட்ட நிர்வாக உத்தரவு எண். 14324-ன் படி, $800 வரையிலான இறக்குமதி பொருட்களுக்கான சுங்க வரி விலக்கு திரும்பப் பெறப்படுகிறது. இருப்பினும், கடிதங்கள், ஆவணங்கள் மற்றும் $100 வரையிலான பரிசுப் பொருட்களுக்கு தொடர்ந்து வரி விலக்கு உண்டு.

இந்த நிர்வாக உத்தரவின்படி, அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்புத் துறையால் (CBP) அங்கீகரிக்கப்பட்ட போக்குவரத்து நிறுவனங்கள் அல்லது "தகுதி வாய்ந்த தரப்பினர்" அஞ்சல் சரக்குகளுக்கான வரிகளை வசூலித்து செலுத்த வேண்டும். இதன் விளைவாக, அமெரிக்கா செல்லும் விமான நிறுவனங்கள், செயல்பாட்டு மற்றும் தொழில்நுட்ப ரீதியான தயார்நிலை இல்லாததால், அஞ்சல் சரக்குகளை ஏற்க இயலாது என்று தெரிவித்துள்ளன.

இதையும் படியுங்கள்:
20 ஆண்டுகளுக்கு மேலான பழைய வாகனங்களுக்குப் பதிவுக் கட்டணம் இரு மடங்காக உயர்வு..!
Indian post

"வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு அஞ்சல் துறை வருத்தம் தெரிவிக்கிறது. அமெரிக்காவிற்கான முழு சேவைகளையும் விரைவில் தொடங்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன" என்று அந்த அறிக்கை கூறியுள்ளது. நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், சேவைகளை விரைவில் இயல்பு நிலைக்குக் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அஞ்சல் துறை மேலும் தெரிவித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com