அமெரிக்காவுக்கு இந்தியா அளித்த ₹19.27 லட்சம் கோடி 'சலுகை'! மருந்து விலைகளைக் கட்டுப்படுத்திய மாயாஜாலம் தெரியுமா?

அமெரிக்காவின் மனமாற்றம் : இந்தியப் பொது மருந்துகளுக்கான அமெரிக்கத் தடை ரத்து!
Hand offering money, medicines flowing, crowd looking up.
India's ₹18 lakh crore concession controlling US medical costs.
Published on

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொது மருந்துகளுக்கு (Generic Drugs) வரி (Tariff) விதிக்க டிரம்ப் நிர்வாகம் மேற்கொண்டிருந்த தீவிரத் திட்டத்தை அமெரிக்க வர்த்தகத் துறை திடீரெனக் கைவிட்டுள்ளது. இந்த முடிவு, இந்திய மருந்து நிறுவனங்களுக்கு மிகப்பெரிய நிம்மதியை அளித்துள்ளது.

இந்திய நிறுவனங்களுக்கு ஏன் இது முக்கியம்?

இந்தியாவை 'உலகத்தின் மருந்தகம்' (Pharmacy to the World) என்று அழைப்பதுண்டு.

இதற்குக் காரணம், அமெரிக்காவில் உள்ள மருந்துக் கடைகளில் நிரப்பப்படும் பொது மருந்துச் சீட்டுகளில் கிட்டத்தட்ட 50% பங்களிப்பை இந்தியா தான் வழங்குகிறது.

  • பொது மருந்துச் சந்தையில் இந்தியா 47% பங்களிப்புடன் மிகப்பெரிய சப்ளையராக உள்ளது.

  • அமெரிக்க உள்நாட்டு உற்பத்தியாளர்களின் பங்கு வெறும் 30% மட்டுமே.

இந்தியா போன்ற நாடுகளில் தயாரிக்கப்படும் பொது மருந்துகள் மிக மிகக் குறைவான விலையில் கிடைப்பதால், உயர் இரத்த அழுத்தம், மனச்சோர்வு, அல்சர், அதிக கொழுப்பு (Cholesterol) போன்ற பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்குச் சிகிச்சையளிக்கும் மில்லியன் கணக்கான அமெரிக்கர்கள் இந்த மலிவான மருந்துகளையே நம்பி உள்ளனர்.

இந்த நிலையில், வரி விதிக்கப்பட்டால், மருந்துகளின் விலை பல மடங்கு அதிகரிக்கும் என்ற கவலை அமெரிக்க மக்களிடையே நிலவியது.

டிரம்ப் நிர்வாகத்தின் உள்ளேயே நடந்த சண்டை

இந்த வரிக் கொள்கையைக் கைவிடுவதற்கு, வெள்ளை மாளிகைக்குள் நடந்த கடுமையான உள் விவாதமே முக்கியக் காரணம் என்று வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.

டிரம்பின் கடினப் போக்காளர்கள் (Hardliners): அமெரிக்காவில் மருந்து உற்பத்தியை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்றும், தேசியப் பாதுகாப்பைக் காரணம் காட்டியும் வரி விதிக்க அழுத்தம் கொடுத்தனர்.

டிரம்பின் உள்நாட்டுக் கொள்கைக் குழு (Domestic Policy Council): இந்த வரிவிதிப்பால் மருந்துகளின் விலை கூடும் என்றும், தேவைக்கு மருந்துப் பற்றாக்குறை ஏற்படும் என்றும் கடுமையாக வாதிட்டனர்.

மேலும், இந்தியாவில் பொது மருந்துகளின் உற்பத்திச் செலவு மிகக் குறைவு என்பதால், மிக அதிக வரி விதித்தாலும் கூட அமெரிக்காவில் அதே மருந்துகளை லாபகரமாக உற்பத்தி செய்ய முடியாது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

அமெரிக்கப் பொருளாதாரப் பின்னடைவு

ஏற்கெனவே டிரம்ப் கொண்டு வந்த வர்த்தகப் போர்க் கொள்கை காரணமாக, அமெரிக்கப் பொருளாதாரம் பல இடங்களில் சிக்கலைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக:

  • சீனா, அரிதான தாதுக்கள் (Rare Earths) ஏற்றுமதியில் கட்டுப்பாடுகளை விதித்தது.

  • சீனா, அமெரிக்கச் சோயா பீன்ஸ் போன்ற விவசாயப் பொருட்களைப் புறக்கணித்ததால், அமெரிக்க விவசாயிகள் பெரும் பாதிப்பைச் சந்தித்தனர். இதனால், அரசு விவசாயிகளுக்கு நிவாரணமாக $16 பில்லியன் டாலரை வரி மூலம் திரட்டி வழங்கியது.

"அரசாங்கம் நம்மிடம் இருந்து பணத்தை வசூலித்து, மீண்டும் நம்மிடமே கொடுக்கிறது" என்று ஒரு விவசாயி சமூக ஊடகத்தில் வேதனையைப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

நிம்மதி அளித்த இந்தியாவின் மருந்துகள்

பொது மருந்துகளுக்கான வரியை ரத்து செய்ததன் மூலம், அமெரிக்க மக்களுக்கு கூடுதல் 'கசப்பான மாத்திரையை' (Bitter Medicine) வழங்க வெள்ளை மாளிகை விரும்பவில்லை என்பது தெளிவாகிறது.

இந்தியாவில் தயாரிக்கப்படும் பொது மருந்துகள், 2022 ஆம் ஆண்டில் மட்டும் அமெரிக்கச் சுகாதார அமைப்பிற்கு சுமார் $219 பில்லியன் டாலரை (தோராயமாக ₹19.27 இலட்சம் கோடி) சேமித்துக் கொடுத்துள்ளன. கடந்த ஒரு தசாப்தத்தில் இந்தச் சேமிப்பு $1.3 டிரில்லியன் ஆகும்.

2022 ஆம் ஆண்டில், அமெரிக்காவில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்ட முதல் 10 மருத்துவப் பிரிவுகளுக்கான மருந்துச் சீட்டுகளில் 50%-க்கும் அதிகமானவற்றை இந்திய நிறுவனங்களான சிப்லா, சன் ஃபார்மாசூட்டிகல்ஸ், டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரீஸ் போன்றவையே விநியோகம் செய்துள்ளன.

இவற்றில் கொழுப்பு குறைப்பு (cholesterol), உயர் இரத்த அழுத்தம் (hypertension), மனச்சோர்வு (depression), அல்சர் எதிர்ப்பு மருந்துகள் (anti-ulcerants) மற்றும் நரம்பு மண்டலக் கோளாறுகள் (nervous system disorders) போன்ற ஐந்து முக்கிய சிகிச்சை பிரிவுகள் அடங்கும்.

இதையும் படியுங்கள்:
அத்தியாவசியப் பொருட்களுக்காக அமெரிக்கா கையேந்தும் நேரம் வந்தாச்சு..!
Hand offering money, medicines flowing, crowd looking up.

இந்தத் துறைகளில் தேவைப்படும் ஜெனரிக் மருந்துகளான நீரிழிவுக்கான மெட்ஃபார்மின், கொழுப்பைக் குறைக்கும் அடோர்வாஸ்டேடின், இரத்த அழுத்தத்திற்கான லோசார்டன் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் (amoxicillin, ciprofloxacin போன்றவை) ஆகியவை இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு அதிக அளவில் ஏற்றுமதியாகும் பொது மருந்துகளின் பட்டியலில் முன்னணியில் உள்ளன. இந்த தடை நீக்கத்தின் மூலம், அமெரிக்க மக்கள் தொடர்ந்து இந்த அத்தியாவசிய மருந்துகளைக் குறைந்த விலையில் பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com