பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதலை தவிடு பொடியாக்கிய இந்திய ராணுவம்! 

Pakistan Drone Attack
Pakistan Drone Attack
Published on

ஆபரேஷன் சிந்தூர் காரணமாக சமீபத்தில் எல்லையில் நிலவிய பதட்டமான சூழலில், பாகிஸ்தான் தரப்பிலிருந்து இந்திய எல்லைப் பகுதிகளை நோக்கி ஆளில்லா விமானங்கள் (டிரோன்கள்) மற்றும் ஏவுகணைகள் மூலம் ஒரு பெரிய தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சம்பவம் சுமார் 35 நிமிடங்கள் வரை நீடித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஜம்மு, பதான்கோட், உதம்பூர் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த ராணுவத் தளங்கள் அமைந்துள்ள பகுதிகளும், ராஜஸ்தான் வரை சில எல்லைப்புற மாவட்டங்களும் இந்தத் தாக்குதலில் குறிவைக்கப்பட்டன. பயங்கரவாதிகள் முகாம்களை அழித்து இந்தியா கொடுத்த பதிலடிக்கு எதிர்வினையாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பாகிஸ்தானின் இந்த திடீர் வான்வழித் தாக்குதல் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, இந்திய பாதுகாப்புப் படைகள் முழுமையான தயார்நிலையுடன் உடனடியாகச் செயல்பட்டன. இந்தியாவின் அதிநவீன வான் பாதுகாப்பு அமைப்பான எஸ்-400, எந்த ஒரு ஊடுருவலையும் அனுமதிக்காத வகையில் அதன் பணியைச் சிறப்பாகச் செய்தது. வானில் பறந்து வந்த அனைத்து ஆளில்லா விமானங்களையும், அத்துடன் அனுப்பப்பட்ட சில ஏவுகணைகளையும் துல்லியமாக இடைமறித்து அழித்தது. இதன் காரணமாக, ஒரு டிரோன் கூட இந்திய வான் எல்லைக்குள் நுழையவில்லை.

இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு மிகவும் திறம்பட செயல்பட்டதால், பாகிஸ்தானின் தாக்குதலால் இந்திய ராணுவத்திற்கோ அல்லது பொதுமக்களுக்கோ எந்தவிதமான உயிர் சேதமோ, அல்லது பொருட் சேதமோ ஏற்படவில்லை. முப்பத்தி ஐந்து நிமிடங்கள் நீடித்த பாகிஸ்தானின் இந்த முயற்சி முழுமையாக முறியடிக்கப்பட்ட சில நிமிடங்களுக்குள்ளேயே, இந்தியத் தரப்பிலிருந்தும் பாகிஸ்தான் நிலைகளை நோக்கிப் பதிலடி தாக்குதல் தொடுக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்:
பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி: 'Operation Sindoor' மூலம் பயங்கரவாத முகாம்களைத் தாக்கியது இந்தியா!
Pakistan Drone Attack

இந்தச் சம்பவம் இந்தியாவின் பாதுகாப்புத் திறனையும், வான் பாதுகாப்பு அமைப்புகளின் செயல்திறனையும் உலகிற்கு உணர்த்தியுள்ளது. குறுகிய நேரத்தில் தொடுக்கப்பட்ட பல்வேறு அச்சுறுத்தல்களை இந்தியா எந்தச் சேதமும் இன்றி எதிர்கொண்டது, நாட்டின் பாதுகாப்புப் படையின் தயார்நிலையைக் காட்டுகிறது. 

இந்தப் பரபரப்பான நிகழ்வுகள் இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லையில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது, இது ஒருவித அறிவிக்கப்படாத போர்ப் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

இதையும் படியுங்கள்:
நிகழ் காலத்திலிருந்துதான் எதிர்காலம்!
Pakistan Drone Attack

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com