வெயிலா.....குளிரா .... ? சட்டென்று மாறுது வானிலை ! அர்ஜென்டினாவின் அதிசய பருவநிலை!

வெயிலா.....குளிரா .... ? சட்டென்று மாறுது வானிலை ! அர்ஜென்டினாவின் அதிசய பருவநிலை!

அர்ஜென்டினாவில் வெறும் 5 நாள் இடைவெளியில் தட்ப வெட்பமானது இரு உச்சங்களை தொட்டுள்ளது மக்களிடையே பீதியையும் , பரபரப்பினையும் ஒருசேர ஏற்படுத்தியுள்ளது .

உலகமே தற்போது அதீத பருவநிலை மாற்றங்களால் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. பருவம் தவறிய புயல் வெள்ளம் மழை என சந்தித்து வருவது வழக்கமாகி விட்டது. வெயில் காலங்களில் பனி பொழிவுகளும். பனிக்காலங்களில் கடும் சுட்டெரிக்கும் வெயிலையும் காணமுடிகிறது. உலகெங்கும் தட்பவெட்ப சூழல் மாறுபாடு காரணமாக இத சூழல் நிலவிவருகிறது.

இந்த வகையில் அர்ஜென்டினாவில் கடந்த சில வாரங்களாகவே அந்நாட்டில் சுமார் 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவி மக்களை கடும் சூட்டினால் தத்தளிக்க வைத்தது. அந்நாட்டின் சராசரி வெப்பத்தை விட இந்தாண்டு அதிக வெப்பநிலை உணரப்பட்டது. எனவே, பொதுமக்களுக்கு வெப்பக்காற்று எச்சரிக்கையும் அங்கு விடப்பட்டது.

தட்பவெட்ப சூழல் மாறுபாடு காரணமாக அந்நாட்டில் காற்று மற்றும் மண் வழக்கத்தை விட தீவிரமான வறட்சியுடன் காணப்படும் என வானிலை நிபுணர் கிறிஸ்டியன் கராவாக்லியா எச்சரித்தார்.

கடந்த ஞாயிறு வரை கடும் வெப்பத்தில் தவித்து வந்த அர்ஜென்டினாவில், திடீரென பருவம் மாறி பனிப்பொழிவு ஏற்படத் தொடங்கியுள்ளது. கடந்த சில நாள்களாக பனிப்பொழிவு ஏற்பட்டதுடன், வியாழக்கிழமை அன்று குளிர் உச்சம் தொட்டு தட்பவெட்பம் 7.9 டிகிரியாக குறைந்து பதிவானது.

வெறும் நான்கே நாட்களில் சுமார் 40 டிகிரியில் இருந்த வெப்ப நிலையில், 8 டிகிரிக்கும் குறைவாக சரிந்தது. குறுகிய நேரத்தில் இத்தகைய தட்பவெட்ப மாறுதலை அர்ஜென்டினா சந்திப்பது இதுவே முதல்முறை. காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் தான் இது அதீத தட்பவெட்பத்தை அர்ஜென்டினா சந்திப்பதாக சூழலியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com