60 நாள் போர் நிறுத்தம்… ஒப்புதல் வழங்கிய இஸ்ரேல் !

Gaza war
Gaza war
பாரதி

Hii… I am Kavi Bharathi. Working as a Content Writer in the name Bharathi. Experiencing in Writing and Social Media Handling. And probably writing in News, Sports News, Cinema News, Art/Culture, Beauty/Fashion. Working hard to grab your attention through my contents. I will try my best to fulfill your expectations.

Updated on

கடந்த பல மாதங்களாக நீடித்து வந்த மோதல்களுக்கு மத்தியில், 60 நாட்கள் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இது காசா மக்களுக்கு ஒரு பெருமூச்சு விடக்கூடிய தருணம் என பலராலும் பார்க்கப்படுகிறது. இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள இந்த உடன்படிக்கை, சர்வதேச சமூகம் மேற்கொண்ட கடுமையான இராஜதந்திர முயற்சிகளின் விளைவாகும்.

அக்டோபர் 7, 2023 அன்று ஹமாஸ் இஸ்ரேல் மீது நடத்திய திடீர் தாக்குதல், இரு நாட்டு மோதலின் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் காசா மீது கடுமையான பதிலடியைக் கொடுத்தது. இந்தத் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனப் பொதுமக்கள், குறிப்பாகப் பெண்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்பட்டனர். காசா முனை முழுமையாக அழிக்கப்பட்டது, லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி இடம்பெயர வேண்டிய நிலை ஏற்பட்டது. இப்படியான நிலையில், போர் இடைவெளிகள் விட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களாக, இஸ்ரேலிய பணயக்கைதிகள் விடுவிக்கப்படுவதும், அதற்கு ஈடாக கணிசமான பாலஸ்தீனிய கைதிகள் விடுவிக்கப்படுவதும் அடங்கும். அத்துடன், காசாவிற்கு அத்தியாவசிய மனிதாபிமான உதவிகளை தங்கு தடையின்றி கொண்டு செல்வதற்கும் இந்த போர் நிறுத்தம் வழிவகை செய்யும். உணவு, மருந்து, குடிநீர் போன்ற அடிப்படைத் தேவைகளுக்காகப் போராடி வந்த காசா மக்களுக்கு இது பெரும் ஆறுதலாக இருக்கும்.

ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பல உலக நாடுகள் இந்த போர் நிறுத்தத்தை வரவேற்றுள்ளன. இது நிரந்தர சமாதானத்தை நோக்கிய முதல் அடியாக இருக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட பகுதிகளின் புனரமைப்புப் பணிகளுக்கு சர்வதேச சமூகம் உதவ முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
சித்தா மற்றும் ஆயுர்வேத மருந்துகள் செயல்பட தாமதமாவதற்கு என்ன காரணம்?
Gaza war

இருப்பினும், இந்த போர் நிறுத்தம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. கடந்த காலங்களில் எட்டப்பட்ட பல போர் நிறுத்தங்கள் குறுகிய காலத்திலேயே முறிந்து போன அனுபவங்கள் உண்டு. ஆனாலும், இந்த 60 நாட்கள், காசாவில் இயல்பு வாழ்க்கையை ஓரளவுக்கு மீட்டெடுக்கவும், மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பெரும் சோர்வில் உள்ள மக்களுக்கு ஒரு சிறிய நம்பிக்கையை அளிக்கவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் போர் நிறுத்தம், எதிர்காலத்தில் ஒரு நீடித்த அமைதி தீர்வை எட்டுவதற்கு ஒரு வாய்ப்பாக அமையுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

logo
Kalki Online
kalkionline.com