
இந்தியர்கள் பொதுவாக காலை 9 மணியிலிருந்து இரவு 9 மணி வரை பல்வேறு அலுவலகங்களில் பணிபுரிவதை வழக்கமாக கொண்டுள்ளார்கள். இவ்வழக்கம் பாராட்டுதலுக்குரியது என்று ஜப்பான் ஸ்டார்ட்அப் மைக்ரோபைனான்ஸ் ஹக்கி நிறுவனத்தின் நிறுவனர் ரெய்ஜி கோபயாஷி சமீபத்தில் தெரிவித்துள்ளார்.
இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு கார் வாங்குவதற்கான தேவையான நிதி உதவியை ஜப்பானில் தலைமையகத்தைக் கொண்டு இயங்கி வரும் கென்யா ஹக்கி நிறுவனம் வழங்கி வருகிறது. உலகில் தென்னாப்பிரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் இந்நிறுவனம் கால்பதித்து வளர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 2024-ம் ஆண்டு பெங்களூருவில் ஹக்கி நிறுவனம் செயல்பட தொடங்கியது.
இந்தியாவில் பொருளாதாரத்தைப் பற்றி கருத்து தெரிவித்துள்ள கோபயாஷி,’இந்தியப் பொருளாதாரம் மிக வேகமாக வளர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்திய மக்களின் எனர்ஜியை நான் மிகவும் விரும்புகிறேன். அவர்கள் தங்களது எதிர்காலத்தை பற்றி மிகவும் நம்பிக்கையுடன் உள்ளனர்.’என்று கூறியுள்ளார்.
மேலும்,அவர்,’இந்திய மக்கள் ஜப்பான் மக்களிடமிருந்து வேறுபட்டவர்கள்.ஜப்பானில் அதிக மக்கள் வயதானவர்களாக இருப்பதால் அவர்கள் எல்லாவற்றிலும் நிதானமாகவும், முன்னெச்சரிக்கையாகவும் செயல்பட விரும்புகின்றனர். இந்தியர்களைப்போல் அதிக ரிஸ்க் எடுக்க விரும்புவதில்லை. ’என்று கூறியுள்ளார்.
குறிப்பாக, இந்தியர்கள் காலை 9 மணியிலிருந்து இரவு 9 மணி வரை மிகவும் எனர்ஜியுடன் பணியாற்றுவதை பார்ப்பது அவரை ஈர்த்துள்ளது. ஜப்பான் பணி கலச்சாரத்துக்கும், இந்திய பணி கலாச்சாரத்துக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. ’இந்தியாவில் முதலீட்டாளர்கள் விரைவாக முடிவெடுத்து. அனைவரிடமும் நட்புறவுடன் செயல்படுகின்றனர்’என்றும் கோபயாஷி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.