இந்தியர்களின் பணி நேரம் பாராட்டுதலுக்குரியது! ஜப்பான் ஸ்டார்ட்அப் நிறுவனர் கருத்து..!

Japenese founder Raishi
Japenese founder Raishisource : hindu
முனைவர் என். பத்ரி

சுமார் நாற்பது எட்டு ஆண்டுகள் கல்விப் பணியாற்றியுள்ள டாக்டர்.என்.பத்ரி (1956) தனது பி.எச்.டி. படிப்பை கல்வியியல் மற்றும் ஆங்கிலத்தில் முடித்தவர். NCERT விருதையும் பெற்றவர்.அகில இந்திய வானொலியின் கல்வி ஒலிபரப்புக்கான ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக பணியாற்றியுள்ளார். பல்வேறு பல்கலைக்கழகங்களின் தொலைதூரக்கல்வியின் படிப்புகளுக்கு கருத்தாளாராக பணியாற்றியுள்ளார். பல முன்னோடி தமிழ் இதழ்களில் இவருடைய கட்டுரைகளும் சிறுகதைகளும் பிரசுரிக்கப்பட்டு வருகின்றன. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கு கொண்டு தற்கால இளஞர்களுக்கு வழிகாட்டி வருகிறார்.

Updated on

இந்​தி​யர்​கள் பொதுவாக காலை 9 மணியி​லிருந்து இரவு 9 மணி வரை பல்வேறு அலுவலகங்களில் பணிபுரிவதை வழக்கமாக கொண்டுள்ளார்கள். இவ்வழக்கம் பாராட்​டு​தலுக்​குரியது என்று ஜப்​பான் ஸ்டார்ட்​அப் மைக்​ரோபை​னான்ஸ் ஹக்கி நிறு​வனத்​தின் நிறு​வனர் ரெய்ஜி கோப​யாஷி சமீபத்தில் தெரி​வித்​துள்​ளார்.

இந்தியா போன்ற வளரும் நாடு​களுக்கு கார் வாங்​கு​வதற்​கான தேவையான நிதி உதவியை ஜப்பானில் தலைமையகத்தைக் கொண்டு இயங்கி வரும் கென்யா ஹக்கி நிறு​வனம் வழங்கி வரு​கிறது. உலகில் தென்​னாப்​பிரிக்கா​வுக்கு அடுத்​த​படி​யாக இந்​தி​யா​வில் இந்நிறுவனம் கால்​ப​தித்​து வளர்ந்துள்​ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 2024-ம் ஆண்டு பெங்​களூரு​வில் ஹக்கி நிறு​வனம் செயல்பட தொடங்​கியது.

இந்​தி​யா​வில் பொருளா​தா​ரத்தைப் பற்றி கருத்து தெரிவித்துள்ள கோபயாஷி,’இந்தியப் பொருளாதாரம் மிக வேக​மாக வளர்​வதற்​கான வாய்ப்​பு​கள் உள்​ளன. இந்திய மக்​களின் எனர்​ஜியை நான் மிக​வும் விரும்​பு​கிறேன். அவர்​கள் தங்​களது எதிர்​காலத்தை பற்றி மிக​வும் நம்​பிக்​கை​யுடன் உள்​ளனர்.’என்று கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்:
அதிக சம்பளமுடன் மன நிம்மதியும் வேணுமா? இந்த பணிகளைத் தேர்ந்தெடுங்கள் மக்களே!
Japenese founder Raishi

மேலும்,அவர்,’இந்திய மக்கள் ஜப்​பான் மக்களிடமிருந்து வேறு​பட்​டவர்கள்.ஜப்பானில் அதிக மக்கள் வயதானவர்​களாக இருப்​ப​தால் அவர்​கள் எல்​லா​வற்​றி​லும் நிதான​மாக​வும், முன்​னெச்​சரிக்கையாகவும் செயல்பட விரும்​பு​கின்​றனர். இந்தியர்களைப்போல் அதிக ரிஸ்க் எடுக்க விரும்​புவ​தில்​லை. ’என்று கூறியுள்ளார்.

குறிப்​பாக, இந்​தி​யர்​கள் காலை 9 மணியி​லிருந்து இரவு 9 மணி வரை மிக​வும் எனர்​ஜி​யுடன் பணி​யாற்​று​வதை பார்ப்​பது அவரை ஈர்த்​துள்​ளது. ஜப்​பான் பணி கலச்​சா​ரத்​துக்​கும், இந்​திய பணி கலாச்​சா​ரத்​துக்​கும் இடையே மிகப்​பெரிய வித்​தி​யாசம் உள்​ளது. ’இந்​தி​யா​வில் முதலீட்​டாளர்​கள் விரை​வாக முடி​வெடுத்து. அனைவரிடமும் நட்​புறவுடன் செயல்​படு​கின்​றனர்’என்றும் கோப​யாஷி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது​.

logo
Kalki Online
kalkionline.com