நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆம் ஆத்மி வெற்றி!

 நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆம் ஆத்மி வெற்றி!

டெல்லியில் ஆளும் கட்சியான ஆம் ஆத்மி அரசை கவிழ்க்க பாஜக சதி செய்வதாக முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டி வந்தார்.

இந்நிலையில் ஆம் ஆத்மி எல்எல்ஏக்கள் அனைவரும் அவருடன் இருப்பதை நிரூபிக்கும் வகையில் டெல்லி சட்டப்பேரவையில் கடந்த திங்கட்கிழமை அவையின் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டு வந்தார்.

இத்தீர்மானம் மீது சட்டப்பேரவையில் நேற்று வாக்கெடுப்பு நடைபெற்றது.ஆம் ஆத்மி எல்எல்ஏ-க்கள் 62 பேரில் 58 பேர் குரல் வாக்கெடுப்பில் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனர்.

அப்போது பாஜக எம்எல்ஏக்கள் அவையில் இல்லாதால் நம்பிக்கை தீர்மானத்திற்கு எதிராக யாரும் வாக்களிக்கவில்லை. இதனால் கெஜ்ரிவால் அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

-இதையடுத்து அர்விந்த் கேஜ்ரிவால் பேசியதாவது:

டெல்லி சட்டப் பேரவையில் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் மூலம் ஆம் ஆத்மி கட்சியின் ஒற்றுமை மற்றும் பலத்தை நிரூபித்துள்ளோம்.ஆம் ஆத்மி எம்எல்ஏ-க்களை பாஜக-வினரால் விலைக்கு வாங்க முடியாது என்பதை நிரூபித்துள்ளோம்.

டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா வீட்டில் சிபிஐ சோதனை நடத்தியதைத் தொடர்ந்து குஜராத்தில் ஆம் ஆத்மியின் வாக்கு வாங்கி 4 சதவீதம் உயர்ந்துள்ளது.

-இவ்வாறு கெஜ்ரிவால் கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com