ஓணம் பண்டிகை: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து சர்ச்சை!

ஓணம் பண்டிகை: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து சர்ச்சை!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவிக்காமல், இன்று கேரளாவில் விமரிசையாகக் கொண்டாடப்படும் ஓணம் பன்டிகைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

-இதுகுறித்து தமிழக பாஜக சார்பில் தெரிவித்ததாவது;

தமிழக மக்கள் கொண்டாடும் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்காமல், கேரளா மக்களுக்கு மட்டும் ஓணம் பன்டிகை வாழ்த்து தெரிவிப்பதுதான் திராவிட மாடலா? 'ஓணம் பண்டிகையின் தாத்பர்யம் – மகாபலி சக்கரவர்த்தியிடம் மகாவிஷ்ணு வாமன ரூபத்தில் வந்து 3 அடி மண் கேட்டு ஆகாயத்தையே காலால் அளந்த வரலாறு.

ஆன்மீகத்தை நம்பாத முதல்வர் ஸ்டாலின், இதை மட்டும் நம்புகிறாரா? தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர், தமிழ் பண்டிகைக்கு வாழ்த்த தெரிவிக்காமல் வெளிமாநில மக்கள் கொண்டாடும் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவிப்பதுதான் திராவிட மாடலா?

-இவ்வாறு தெரிவித்தனர்.

logo
Kalki Online
kalkionline.com