ஓணம் பண்டிகை: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து சர்ச்சை!

ஓணம் பண்டிகை: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து சர்ச்சை!

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவிக்காமல், இன்று கேரளாவில் விமரிசையாகக் கொண்டாடப்படும் ஓணம் பன்டிகைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

-இதுகுறித்து தமிழக பாஜக சார்பில் தெரிவித்ததாவது;

தமிழக மக்கள் கொண்டாடும் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்காமல், கேரளா மக்களுக்கு மட்டும் ஓணம் பன்டிகை வாழ்த்து தெரிவிப்பதுதான் திராவிட மாடலா? 'ஓணம் பண்டிகையின் தாத்பர்யம் – மகாபலி சக்கரவர்த்தியிடம் மகாவிஷ்ணு வாமன ரூபத்தில் வந்து 3 அடி மண் கேட்டு ஆகாயத்தையே காலால் அளந்த வரலாறு.

ஆன்மீகத்தை நம்பாத முதல்வர் ஸ்டாலின், இதை மட்டும் நம்புகிறாரா? தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர், தமிழ் பண்டிகைக்கு வாழ்த்த தெரிவிக்காமல் வெளிமாநில மக்கள் கொண்டாடும் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவிப்பதுதான் திராவிட மாடலா?

-இவ்வாறு தெரிவித்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com