நாளை மறுநாள் முதல் ‘கலைஞர் உலகம்’ அருங்காட்சிகம் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதி!

'Kalaignar World' Museum is open to the public!
'Kalaignar World' Museum is open to the public!https://tamil.oneindia.com

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நினைவிடம் சென்னை, மெரினா கடற்கரையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினால் கடந்த 26.2.2024 அன்று திறந்து வைக்கப்பட்டது. பொதுமக்கள் ஏராளமானோர் தினமும் வந்து கருணாநிதியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கலைஞர் கருணாநிதியின் கலை, இலக்கிய, அரசியல் வாழ்க்கை வரலாற்றினைப் பொதுமக்களுக்குத் தெரிவிக்கும் வகையில் அந்த நினைவிட வளாகத்தின் நிலவறையில் நவீன தொழில்நுட்பம் மற்றும் பல்வேறு அரங்கங்களுடன், ‘கலைஞர் உலகம்’ என்னும் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அருங்காட்சியகத்தை பார்வையிடுவது குறித்து அரசின் செய்திக் குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், “கலைஞர் அருங்காட்சியகத்தில் கலைஞரின் நிழலோவியங்கள், உரிமை வீரர் கலைஞர், கலைஞருடன் ஒரு புகைப்படம், புதிரை வெல் கலைஞர் வழிசெல், அரசியல் கலை அறிஞர் கலைஞர், கலைஞருடன் ஒரு நேர்காணல், நவீன தமிழ்நாட்டின் சிற்பி, பண்பாட்டுப் பேழை, கலைஞரின் வரலாற்றுச் சுவடுகள், கலைஞரின் மகளிர் மேம்பாட்டுத் திட்டங்கள், சரித்திர நாயகனின் சாதனைப் பயணம் போன்ற அரங்கங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த அருங்காட்சியகத்தினைப் பொதுமக்கள் பார்வையிடுவதற்கு நாளை மறுநாள் (6.3.2024) புதன்கிழமை முதல் அனுமதிக்கப்பட உள்ளது. இதனைப் பார்வையிடுவதற்குத் தமிழ்நாடு அரசின் https://www.kalaignarulagam.org/ என்ற இணைய முகவரி (Webportal) உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணைய முகவரியில் பொதுமக்கள் பதிவு செய்து அனுமதிச் சீட்டினைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். கலைஞர் உலகத்திற்கான அனுமதிச் சீட்டு பெறுவதற்குக் கட்டணம் ஏதுமில்லை. முற்றிலும் இலவசமாக கலைஞர் உலகம் அருங்காட்சியகத்தை பொதுமக்கள் கண்டு களிக்கலாம்.

இதையும் படியுங்கள்:
திமுக சார்பில் எம்.பி தேர்தலில் போட்டியிடப் போகிறாரா வடிவேலு?
'Kalaignar World' Museum is open to the public!

ஒருவர் ஒரு அலைபேசி எண்ணின் மூலம் அதிகபட்சமாக 5 அனுமதிச் சீட்டுகள் வரை பெற்றுக்கொள்ள இயலும். இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட அனுமதிச் சீட்டுடன் வருபவர்களுக்கு நிலவறையிலுள்ள கலைஞர் உலகத்திற்கு அனுமதி வழங்கப்படும்.

ஒவ்வொரு நாளும் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை 6 காட்சிகளாக நடைபெறும். பொதுமக்கள் தங்களுக்கு வசதியான காட்சி நேரத்தைத் தேர்வுசெய்து முன்கூட்டியே அனுமதிச் சீட்டினைப் பெற்றுக் கொள்ளலாம். அக்காட்சியினைக் காண வரும் பொதுமக்கள், காட்சி நேரத்திற்கு 30 நிமிடத்திற்கு முன்பாகவே வருகை தர வேண்டும். கலைஞர் உலகம் அருங்காட்சியகத்தை பார்வையிட ஏறத்தாழ ஒன்றரை மணி நேரம் ஆகும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com