

ஜம்மு காஷ்மீர் ஷோபியான் (Shopian)மாவட்டத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்தே தபால் விநியோகம் செய்து வரும் உல்ஃபத் பானோ(Ulfat Bano), ஜம்மு காஷ்மீரின் முதல் பெண் தபால்காரர். 55 வயதான அவர், தனது சமூகத்திற்கும் வெளி உலகத்திற்கும் இடையே ஒரு முக்கிய இணைப்பாகத் திகழ்ந்து, வாகனம் இல்லாமல் தினமும் நீண்ட தூரம் பயணிக்கிறார்.
ஷோபியான் மாவட்டத்தின் ஹிரபோரா,(Hirapora )கிராமத்தில், சவாலான நிலப்பரப்புகளிலும் கடுமையான குளிர்காலங்களிலும் அவர் நடந்தே தபால்களை விநியோகித்து வருகிறார். உடல் ரீதியான சிரமங்கள் இருந்தபோதிலும், மக்களை இணைப்பதில் உள்ள அவரது பேரார்வம், அவரது அர்ப்பணிப்புக்கு உந்துசக்தியாக விளங்குகிறது. தனது பணியை ஒரு முக்கிய சேவையாகக் கருதும் அவர், தனது சமூகத்திற்கு நற்செய்திகளையும் தபால் பார்சல்களையும் கொண்டு சேர்ப்பதில் மிகுந்த மனநிறைவு காண்கிறார்.இந்த பணியை 30 ஆண்டுகளாக செய்து அர்ப்பணிப்பின் சின்னமாகத் திகழ்கிறார்.
தெற்கு காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் உள்ள மாவட்ட தபால் நிலையத்திலிருந்து உல்ஃபத் பானோ ஒவ்வொரு காலையும் சுமார் 25 கடிதங்களைச் சேகரித்துக்கொண்டு கால்நடையாகப் புறப்படுகிறார். களைப்பு ஏற்பட்டால் ஏறிச் செல்ல தபால் வேனோ , வேறு வாகனமோ அல்லது பயன்படுத்த மிதிவண்டியோ அங்கு இல்லை. 55 வயதான அவர், தனது சொந்த கிராமமான ஹிராபோரா வழியாக, கல் சுவர்களையும், நெளிவுள்ள தகரக் கூரைகளைக் கொண்ட மரக் கொட்டகைகளையும் கடந்து, குளிர்காலம் வரும்போது முழங்கால் ஆழப் பனி வழியாகவும் சிரமப்பட்டு நடந்து சென்று, ஒவ்வொரு கடித உறையையும் உரியவர்களிடம் சேர்க்கிறார். உல்ஃபத்தின் இந்த வழக்கம் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக மாறவில்லை, ஆனாலும் அவர் இந்தப் பணியை ஒரு புதிய பணியாளரின் உற்சாகத்துடனும் ஆற்றலுடனும் செய்து வருகிறார்.
ஹிராபோராவைப் பொறுத்தவரை, காஷ்மீரின் முதல் பெண் தபால்காரரான இவர்தான் வெளி உலகத்துடனான ஒரே தபால் இணைப்பாக இருக்கிறார். உல்ஃபத் தனது கடமையின்போது கடந்துசெல்லும் நிலப்பரப்பு அவருக்குச் சாதகமாக இருப்பதில்லை. ஹிராபோரா ஒரு உயரமான இடத்தில் அமைந்துள்ளது, அங்கு பனிப்பொழிவு வாரக்கணக்கில் நடைபாதைகளைப் புதைத்துவிடும். இந்தப் பகுதிகளில் குளிர்காலத்தில் அடிக்கடி பனிப்பொழிவு ஏற்படும்போதெல்லாம், ஹிராபோரா பல வழிகளிலும் ஸ்தம்பித்து விடுகிறது . ஆனால் தபால் துறையின், உல்ஃபத் வழக்கம் போல் தனது தபால் பணியில் இருப்பார் என்று நம்பலாம்; ஒரு கையில் குடையுடனும், மறு கையில் தபால் கட்டுடனும், அந்த வெண்மையான மலைச்சரிவில் அவரது ஃபெரான்(ஃபெரான் என்பது அகலமான கைகளைக் கொண்ட, தளர்வான மேலாடையாகும். இது கம்பளி அல்லது கம்பளி மற்றும் பருத்தி கலந்த ஜமேவார் துணியால் ஆனது) மட்டுமே வண்ணமயமாகத் தெரியும்.
ஆண்களின் ஆதிக்கம் நிறைந்த ஒரு தொழிலில், ஜம்மு-காஷ்மீரின் மற்ற பகுதிகளில் உள்ள தனது ஆண் சகாக்களைப் போலவே அதே மணிநேரம் வேலை செய்து, அதே அளவு பரப்பளவைக் கடந்து, உல்ஃபத் மாதத்திற்கு 22,000 ரூபாய் சம்பாதிக்கிறார். ஓய்வு பெற இன்னும் ஐந்து ஆண்டுகளே உள்ள நிலையில்,அவர் எந்த வேறுபாட்டையும் காண்பதில்லை. எந்தச் சலுகையையும் அவர் கோருவதில்லை.
"சில நேரங்களில் இது கடினமாக இருக்கிறது,ஆனால், இந்த வேலையின் மீதான எனது பேரார்வம் என்னை விட்டுவிட அனுமதிக்காது." என்கிறார். கடந்த 30 ஆண்டுகளில், நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட கடிதம், வேலை வாய்ப்பு அல்லது தொலைவில் உள்ள ஒருவரிடமிருந்து வரும் பார்சல் போன்ற நற்செய்திகளைக் கொண்டு செல்லும்போதெல்லாம், நூற்றுக்கணக்கான குடும்பங்கள் கொண்டாட்டத்தில் மூழ்கிவிடுவதை உல்ஃபத் கண்டிருக்கிறார்.அதனால் "நான் என் வேலையை ஒரு நற்செயலாகப் பார்க்கிறேன்," என்கிறார் உல்ஃபத்.
உள்ளூர் தபால் நிலையத்திலிருந்து தினமும் சுமார் 25 கடிதங்களைச் சேகரித்து, ஷோபியான் மாவட்டத்தில் உள்ள கடினமான நிலப்பரப்பு மற்றும் மோசமான கடும் பனிப்பொழிவு வானிலை நிலைகளைக் கடந்து நடந்தே சென்று கடிதங்களை விநியோகிக்கிறார்.உல்ஃபத் பானோ அதனால் 'பனிக்கால தபால்காரர்' என்று அன்புடன் குறிப்பிடப்படுகிறார்.