கேரள நடிகைகள் பாலியல் துன்புறுத்தல்: நடிகர் மோகன்லால் ராஜினாமா!

நடிகர் மோகன்லால்
நடிகர் மோகன்லால்
Published on

லையாள நடிகைகள் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து, மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கமான ‘அம்மா’ (AMMA) அமைப்பின் தலைவர் பொறுப்பிலிருந்து நடிகர் மோகன்லால் தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். இவரைத் தொடர்ந்து அந்த அமைப்பின் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தங்களது ராஜினாமா செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கேரள திரையுலகில் மலையாள  நடிகைகள் மற்றும் பெண் திரைக் கலைஞர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவதாக பெரும் சர்ச்சை கிளம்பி உள்ளது. இது குறித்து விசாரித்த நீதிபதி ஹேமா கமிட்டியின் அறிக்கை சில நாட்களுக்கு முன்பு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த அறிக்கை வெளியான சில தினங்களில் மலையாள நடிகைகள் பலரும் தங்களுக்கும் பல்வேறு பாலியல் துன்புறுத்தல்கள் கொடுக்கப்பட்டதாகத் தற்போது கூறி வருவது திரையுலகினர் பலரையும் பெரும் அதிர்ச்சிக்கும்  ஆச்சரியத்துக்கும் உள்ளாக்கி இருக்கிறது.

நடிகர்கள் ஜெயசூர்யா சித்திக், ரியாஸ் கான் உட்பட பலர் மீதும் இந்தப் பாலியல் புகார்கள் கூறப்பட்டுள்ளன. இதற்கிடையில் வங்க மொழி நடிகை ஸ்ரீலேகா மித்ரா, பிரபல இயக்குநரும் மலையாள சினிமா அகாடமி தலைவருமான ரஞ்சித் மீது இதுபோன்றதொரு பாலியல் புகாரை கூறி இருந்தார். இதனால் சினிமா அகாடமி தலைவர் பொறுப்பிலிருந்து ரஞ்சித் விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்ததால், அவர் அந்தப் பதவியில் இருந்து விலகினார். முன்னதாக, ‘அம்மா’ அமைப்பின் பொதுச்செயலாளராக இருந்த சித்திக் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்ட நிலையில், அவரும் தனது பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் ‘அம்மா’ அமைப்பின் தலைவர் மோகன்லால் அமைதி காப்பதாக புகார் எழுந்த நிலையில், இன்று தனது தலைவர் பொறுப்பை மோகன்லால் ராஜினாமா செய்து இருக்கிறார். அவருடன் மற்ற செயற்குழு உறுப்பினர்களும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதையும் படியுங்கள்:
இதயமே இல்லாமல் வாழ்ந்த உலகின் முதல் மனிதன்!
நடிகர் மோகன்லால்

கேரளாவின் மலையாள நடிகர்கள் சங்கத்தில் நடைபெற்ற இந்த அடியோடு ராஜினாமா முடிவு, திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கிடையில், ஹேமா கமிட்டி அறிக்கையின்படி நடிகைகள் பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்க, சிறப்பு புலனாய்வு குழுவை ஒன்றை கேரள அரசு அமைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com