பாகிஸ்தானில் கைகோர்த்த ஹமாஸ் - லஷ்கர் தலைவர்கள்..!இந்தியாவுக்கு எதிராக சதி..?

Meeting between Hamas and Lashkar-e-Taiba
Meeting between Hamas and Lashkar-e-Taiba source:firstpost
Published on

சர்வதேச பயங்கரவாத இயக்கங்களான ஹமாஸ் மற்றும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்புகளின் தலைவர்கள், பாகிஸ்தானில் ஒன்று கூடிப் பேசிய வீடியோக்கள் வெளியாகி வருகின்றன. இவர்களின் இந்தச் சந்திப்பு, இந்தியாவிற்கு எதிராக ஏதேனும் சதித் திட்டங்களைத் தீட்டுவதற்காக நடந்ததா என்பது குறித்து இந்திய உளவுத்துறை தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. இந்த நிகழ்வு உலக நாடுகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

லஷ்கர்-இ-தொய்பாவின் பின்னணி: சர்வதேச பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டாலும், லஷ்கர்-இ-தொய்பா தொடர்ந்து இந்தியாவிற்கு எதிரான செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது. இந்தியாவில் நடந்த பல குண்டுவெடிப்புச் சம்பவங்கள் மற்றும் சதித் திட்டங்களுக்கு இந்த அமைப்பே மூளையாகச் செயல்பட்டுள்ளது.

குஜ்ரன்வாலா நகரில் நடந்த சந்திப்பு: சமீபத்தில், பாகிஸ்தானின் குஜ்ரன்வாலா நகரில் 'பாகிஸ்தான் மர்காசி முஸ்லிம் லீக்' என்ற உள்ளூர் அமைப்பு ஒரு பொதுக்கூட்டத்தை நடத்தியது. இது லஷ்கர்-இ-தொய்பாவின் அரசியல் முகமாகச் செயல்படும் அமைப்பாகும். இந்தக் கூட்டத்தில் ஹமாஸ் அமைப்பின் மூத்த தளபதி நாஜி ஜாஹிர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அதே மேடையில் லஷ்கர்-இ-தொய்பாவின் முக்கியத் தளபதி ரஷித் அலி சந்துவும் கலந்து கொண்டுள்ளார். இவர்கள் இருவரும் சந்தித்துப் பேசும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. இவர்களின் சந்திப்பு ஏதேச்சையாக நடந்த ஒன்றாக இருக்காது என்றும், அடுத்தகட்டத் தீவிரவாதத் தாக்குதல்களுக்கான திட்டமாக இது இருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்னதாக, இஸ்லாமாபாத் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் உள்ளிட்ட சில அமைப்புகளும் நாஜி ஜாஹிருக்கு வரவேற்பு அளித்துள்ளன.

கடந்த காலச் சம்பவங்கள்: கடந்த 2025-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், ஹமாஸ் தளபதிகள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குப் பயணம் மேற்கொண்டு லஷ்கர் மற்றும் ஜெய்ஷ்-இ-முகம்மது தலைவர்களுடன் இணைந்து இந்தியாவிற்கு எதிரான பேரணியில் பங்கேற்றனர். அந்தச் சந்திப்பு நடந்த சில நாட்களிலேயே, காஷ்மீரின் பகல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பாதுகாப்புப் படையினர் மீது கொடூரத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கு ஏன் அச்சுறுத்தல்? லஷ்கர்-இ-தொய்பா ஏற்கனவே இந்தியா மற்றும் அமெரிக்காவால் தடை செய்யப்பட்ட அமைப்பாகும். இவர்கள் பாகிஸ்தான் மண்ணில் இருந்து கொண்டு இந்தியாவிற்கு எதிராகச் சதி செய்து வருகின்றனர். தற்போது சர்வதேச அளவில் செல்வாக்குக் கொண்ட, நவீனத் தாக்குதல் நுட்பங்களை அறிந்த ஹமாஸ் அமைப்பு இவர்களுடன் இணைவது இந்தியாவின் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக அமையும். இதனை இந்தியப் பாதுகாப்புத் துறை மற்றும் உளவுத்துறை மிகத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.

இதையும் படியுங்கள்:
ஜனவரி 9ல் வெளியாகுமா 'ஜனநாயகன்'? - சான்றிதழ் வழங்க 4 வாரம் அவகாசம் கேட்ட தணிக்கை வாரியம்..!
Meeting between Hamas and Lashkar-e-Taiba

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com