புதுச்சேரி எல்லையில் 3 நாட்களுக்கு மதுபானக் கடைகள் மூடல்..!

Liquor shops
Liquor shops source:Dailythanthi
Updated on

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை ஒட்டி புதுச்சேரி எல்லையில் உள்ள மதுபானக் கடைகளை 3 நாட்கள் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி அன்று நடைபெற இருக்கின்ற நிலையில் புதுச்சேரி தமிழ்நாடு எல்லையில் உள்ள மதுபானக் கடைகளை மூடுவதற்கு புதுச்சேரி கலால் துறை உத்தரவு பிறப்பித்திருக்கிறது. அதன்படி ஏப்ரல் 21 காலை 10 மணி முதல் ஏப்ரல் 23ஆம் தேதி நள்ளிரவு 12:00 மணி வரை மதுக்கடை மூடுவதற்கு புதுச்சேரி கலால் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதை மீறி கள்ளத்தனமாக மது விற்பனை செய்வது கண்டறிந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
டிவிட்டரில் வாழ்க்கை நடத்தாதீர்கள் களத்திற்கு வாருங்கள்.. அமைச்சர் பி.டி.ஆருக்கு அண்ணாமலை பதிலடி..!
Liquor shops
logo
Kalki Online
kalkionline.com