பயணிகள் கவனத்திற்கு..! எழும்பூர் ரயில் நிலையத்தில் சீரமைப்புப் பணி: பிப். 3 வரை எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்..!

Southern Railway
southern railway
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் வருகிற 15-ந் தேதி முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி 3-ந் தேதி வரை எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, தஞ்சாவூரில் இருந்து எழும்பூர் வரும் உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-16866) வருகிற 15-ந் தேதி முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி 2-ந் தேதி வரை எழும்பூருக்கு பதிலாக தாம்பரம் வந்தடையும். அதே போல, எழும்பூரில் இருந்து தஞ்சாவூர் செல்லும் உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் (16865) வருகிற 16-ந் தேதி முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி 3-ந் தேதி வரை எழும்பூருக்கு பதிலாக தாம்பரத்தில் இருந்து புறப்படும்.

கொல்லத்தில் இருந்து எழும்பூர் வரும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் (20636) வருகிற 15-ந் தேதி முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி 2-ந் தேதி வரை எழும்பூருக்கு பதிலாக தாம்பரம் வரும்.

அதே போல, எழும்பூரில் இருந்து கொல்லம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் (20635) வருகிற 16-ந்தேதி முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி 3-ந்தேதி வரை எழும்பூருக்கு பதிலாக தாம்பரத்தில் இருந்து புறப்படும்.

ராமேசுவரத்தில் இருந்து எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16752) வருகிற 15-ந்தேதி முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி 2-ந்தேதி வரை எழும்பூருக்கு பதிலாக தாம்பரம் வந்தடையும். அதே போல, எழும்பூரில் இருந்து ராமேசுவரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16751) வருகிற 16-ந்தேதி முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி 3-ந் தேதி வரை எழும்பூருக்கு பதிலாக தாம்பரத்தில் இருந்து புறப்படும்.

ஐதராபாத்- தாம்பரம் சார்மினார் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.12760/12759 ) ஜனவரி 1 முதல் பிப்ரவரி 3 வரை சென்னை கடற்கரை வரை மட்டுமே இயக்கப்படும். அதேபோல் தாம்பரத்தில் இருந்து ஐதராபாத் செல்லும் ரெயில் டிசம்பர் 31 முதல் பிப்ரவரி 2 வரை மாலை 6.20 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும்.

இதையும் படியுங்கள்:
கோரமண்டல் எக்ஸ்பிரஸ் வழக்கமான ரெயில் சேவை இன்று தொடங்கியது!
Southern Railway

எழும்பூர் - மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண். 22158) டிசம்பர் 16 முதல் பிப்ரவரி 03 வரை சென்னை கடற்கரை வரை மட்டுமே இயக்கப்படும். அதேபோல் சென்னை எழும்பூரில் இருந்து மும்பை செல்லும் ரெயில் டிசம்பர் 16 முதல் பிப்ரவரி 3 வரை காலை 6.45 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும்.

logo
Kalki Online
kalkionline.com