காணாமல் போன மாடல் அழகி கொலை!

காணாமல் போன மாடல் அழகி கொலை!
Published on

ஹாங்காங்கின் பிரபல மாடல் அழகி அபிசோய் சில நாட்களுக்கு முன் காணாமல் போயிருந்ததாகத் தகவல். ஹாங்காங் போலீஸார் அவரைத் தேடிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் நேற்று முந்தினம் தாய்கோ மாகாணத்தின் கசாப்பு பிரிவில் அவரது கால்களை குளிர்பதனப் பெட்டியில் இருந்து காவல்துறையினர் மீட்டனர். கால்கள் மட்டும் கிடைத்த நிலையில் மற்ற உடல் பாகங்களைத் தேடும் பணியில் தற்போது காவல்துறை ஈடுபட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான தீவிர விசாரணையில் அபிசோயை அவரது முன்னாள் கணவர் தான் கொலை செய்திருக்கிறார் எனும் தகவல் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. சொத்துக்காகத் தனது முன்னாள் மனைவியை அவர் கொலை செய்திருப்பது தெரிய வந்திருக்கிறது. இத்தம்பதிக்கு ஒரு மகனும், மகளும் இருக்கும் நிலையில் இப்படி ஒரு பயங்கரம் நிகழ்ந்திருப்பது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொலைக்கு உடந்தையாக இருந்தவர்கள் என்ற முறையில் முன்னாள் கணவரது சகோதரர் மற்றும் தந்தை இருவரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். மேலும் அபிசோயின் முன்னாள் கணவரிடமிருந்து 52.81 கோடி ரூபாய் பணமும், லட்சக் கணக்கான மதிப்புடைய பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்.

ஹாங்காங்கின் பிரபல மாடல் அழகியாக இருந்த 28 வயது அபி சோய் சர்வதேச அளவில் புகழ் பெற்றவராக இருந்து வந்தார். பாரீஸில் நடந்த 2023 ஆம் ஆண்டுக்கான எலீ சாப் ஸ்ப்ரிங் சம்மர் ஹாடி கோட்டர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மேலும் கடந்த வாரம், எல் அபிசியல் மொனாக்கோ என்ற ஃபேஷன் செய்தி இதழின் டிஜிட்டல் முகப்பு பக்கத்தையும் அலங்கரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சொத்துப் பிரச்சனைக்காக முன்னாள் கணவருடன் தகராறு என்பதைத் தாண்டி பொது வெளியிலும், உத்யோகப்பூர்வமாகவும் எல்லாம் சுமுகமாகவே சென்று கொண்டிருந்திருக்கிறது. இந்நிலையில் அவர் காணாமல் போனது அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களை பெரும் கவலையில் ஆழ்த்தியது. தற்போது காணாமல் போனவரை உயிருடன் மீட்க இயலாமல் அவரது உடல் பாகங்கள் ஆங்காங்கே மீட்கப்படுவது அவரைச் சார்ந்தவர்களை மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கொலை செய்யப்பட்ட அபிசோய்க்கு இன்ஸ்டாகிராமில் 1 லட்சம் பாலோயர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com