ஆந்திராவுக்குப் போக ஆசைப்படும் எம்பி கனிமொழி: ஏன் தெரியுமா?

ஆந்திராவுக்குப் போக ஆசைப்படும் எம்பி கனிமொழி: ஏன் தெரியுமா?
S CHANDRA MOULI

எஸ். சந்திர மௌலி (S Chandra Mouli) எஸ். சந்திர மௌலி கடந்த நாற்பதாண்டுகளாக கல்கி குழும பத்திரிகைகளில் எழுதிவரும் மூத்த பத்திரிகையாளர். கல்கி வெளியிட்ட பல்வேறு சிறப்பிதழ்கள், மற்றும் தீபாவளி மலர்கள், தொழில் மலர்கள், விடுமுறை மலர்களுக்காக இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணம் செய்தவர். 2008ல் கல்கி வெளியிட்ட “குஜராத் டுடே” சிறப்பிதகளுக்காக ஒரு வார காலம் குஜராத் முழுவதும் பயணித்து, குஜராத்தின் வளர்ச்சியை நேரில் கண்டு, எழுதியவர். சமூக அக்கறையோடு கல்கி மேற்கொண்ட “மாதம் ஒரு மாவட்டம்” திட்டத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கும் பயணித்து பங்களித்தவர். வாஜ்பாய், வி.பி.சிங் தொடங்கி மன்மோகன் சிங், நரேந்திர மோடி வரை ஏழு இந்தியப் பிரதமர்களை சந்தித்து பேட்டி கண்டவர். எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, என்.டி.ஆர், ஜோதி பாசு, வெங்கையா நாயுடு, நிர்மலா சீதாராமன், சிவாஜி கணேசன், ரஜினி காந்த், கமலாசன், ஜெமினிகணேசன், சூர்யா, மணிரத்னம், கிரிக்கெட்டர் ஸ்ரீக்காந்த், விக்கு வினாயகராம். உமையாள்புரம் சிவராமன், வயலின் கன்யாகுமரி, ஜெயகாந்தன், நாஞ்சில் நாடன், கவிஞர் வைரமுத்து, கவிஞர் மு.மேத்தா, நா. முத்துகுமார், சோ ராமசாமி என பல்துறைப் பிரபலங்களையும் பேட்டி கண்டு எழுதியவர். இயக்குனர் ஸ்ரீதர், நடிகர் நாகேஷ், ஓவியர் கோபுலு, இயக்குனர் எஸ்பி. முத்துராமன், திருமதி ஒய்,ஜி.பி. ஃபிலிம் நியூஸ் ஆனந்தன், நடிகர் ஏ.ஆர்.எஸ். மெஜிக் நிபுணர் லால் உள்ளிட்ட பலரது வாழ்க்கை அனுபவங்களை இவர் தொடராக எழுதி, அவை பின்னர் புத்தகங்களாக வெளியாகி உள்ளன. இயக்குனர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானபோது, இளைய தலைமுறையினருக்கு அமரர் கல்கி பன்முகச் சாதனை வாழ்க்கையை அறிமுகப்படுத்தும் நோக்கத்துடன் “கல்கி-பொன்னியின் செல்வர்” என்ற தலைப்பில் அவரது வாழ்க்கை வரலாற்றை சுவைபட எழுதியவர். பெண்சிசுக் கொலை தொடர்பான கட்டுரைக்கு “லாட்லி விருதும்”, ரோட்டரி சங்கத்தின் “சாதனை விருதும்” பெற்றவர். தற்போது madraspaper இணைய வார இதழில் “ஓரு குடும்பக் கதை: என்ற தலைப்பில் இந்திய அரசியலில் நேரு குடும்பத்தின் பங்களிப்பு குறித்த நெடுந்தொடர் ஒன்றை எழுதி வருகிறார். சோ குறித்த ஒரு புத்தகத்தை எழுதிக் கொண்டிருக்கிறார்.

Updated on

ந்திராவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ ஏ எஸ் அதிகாரி விஜய் குமார் தல்லம். இவர், தற்போது ஆந்திரப் பிரதேச அரசின் விவசாய ஆலோசகராக இருக்கிறார். 40 ஆண்டுகால அவரது நீண்ட வாழ்க்கையில், பழங்குடியினர், கிராமப்புறங்கள் மற்றும் விவசாயம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் அவர் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. இவருக்கு, சென்னை கிழக்கு ரோட்டரி சங்கம், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் விருது வழங்கி கௌரவித்துள்ளது. இதற்கான விழா அண்மையில் சென்னையில் நடைபெற்றது.

எம் எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் டாக்டர் சௌம்யா சுவாமிநாதன் சிறப்பு விருந்தினராகவும், பாராளுமன்ற உறுப்பினர் திருமதி. கனிமொழி அவர்கள் தலைமை விருந்தினராகவும் கலந்துகொண்டு இந்த ஆண்டு விருதுபெற்ற ஆந்திரப் பிரதேசத்தின் ஓய்வு பெற்ற ஐ ஏ எஸ் அதிகாரியான திரு. விஜய் குமார் தல்லம் அவர்களுக்கு விருதினை வழங்கினார்கள்.

தனது ஏற்புரையில் திரு. விஜயகுமார் “டாக்டர் எம் எஸ் சுவாமினாதனை தனது ஹீரோ என்று குறிப்பிட்டு, விவசாயத் துறையில் அவர் ஆற்றிய அரும்பணிகளை நினைவு கூர்ந்தார். கடந்த நாற்பது ஆண்டுகளில் ஆந்திராவின் விவசாயிகள், பெண்கள், பழங்குடி இனத்தவர்களுடன் இணைந்து விவசாயத் துறையில் தான் ஆற்றிய பணிகளை எடுத்துக் கூறினார்.

ஆந்திராவில் இவரது ஆலோசனையின்படி கடைபிடிக்கப்படும் புதுமையான, எளிமையான விவசாய முறை பற்றி விஜயகுமார் விளக்கிக் கூறினார். “ஜீரோ பட்ஜெட் நேச்சுரல் ஃபார்மிங் என அழைக்கப்படும் இயற்கை உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லிமருந்துகள் கூடப் பயன்படுத்தாத விவசாய முறையை தற்போது ஆந்திரா விவசாயிகளில் 14% பேர் கடைபிடிப்படுகிறது. இந்த முறையில் செய்யபப்டும் விவசாயத்தில் பாசன வசதி அற்ற நிலங்களில் கூட விவசாயிகள் மூன்று போகம் விவசாயம் செய்து லாபம் சம்பாதிக்கிறார்கள். 2026ஆம் ஆண்டுக்குள் ஆந்திராவில் 60 லட்சம் விவசாயிகளும், 12,300 கிராமப் பஞ்சாயத்துக்களும் 80 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் இந்த இயற்கை விவசாயத்தில் ஈடுபடுவார்கள் என்று குறிப்பிட்டார்.

டாக்டர் சௌம்யா சுவாமிநாதன், விருது வெற்ற திரு. விஜயகுமாருக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துவிட்டு, பருவநிலை மாறுபாடு, கோவிடுக்குப் பிந்தைய உடல்நல பாதிப்புகள் உள்ளிட்ட இன்று உலகம் சந்திக்கும் பல்வேறு வகையான சவால்களை விளக்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய திருமதி. கனிமொழி, ஆந்திர மாநிலத்தின் விவசாய முன்னேற்றத்தில் திரு.விஜயகுமாரின் பங்களிப்பினை பாராட்டியதுடன், ஆந்திராவுக்கு நேரில் சென்று அங்கே நடைபெறும் பூஜ்ஜியம் பட்ஜெட் இயற்கை விவசாயத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள மிகவும் ஆர்வமாக இருப்பதாகக் கூறினார். மேலும் அவர், “பருவநிலை மாறுபாடுகளால் ஏழை மக்கள்தான் மிகவும் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். ரசாயனப் பொருட்களால் மனிதர்களின் உணவில் ஏற்படும் பாதிப்புகள் கடுமையாக உள்ளன” என்று கவலை தெரிவித்தார்.

logo
Kalki Online
kalkionline.com