தேசிய கைத்தறி கண்காட்சி: 50% தள்ளுபடியில் கைத்தறி ஆடைகள்..!

50% discount on Handloom dresses
Handloom Exhibition
Published on

பண்டிகை காலங்களில் தள்ளுபடி விலையில் பலவிதமான ஆடைகள் விற்பனை செய்யப்படுவது வழக்கம். பொதுமக்களை ஈர்க்கும் வண்ணம் ஜவளிக்கடைகள் தள்ளுபடி குறித்த விளம்பரங்களை செய்வதுண்டு. இந்நிலையில் இன்னும் சில தினங்களில் தீபாவளி பண்டிகை வரவிருப்பதால், கைத்தறி ஆடைகளுக்கு 50% சிறப்புத் தள்ளுபடி கொடுக்கப்பட்டுள்ளது. இதன்படி வருகின்ற அக்டோபர் 17 ஆம் தேதி வரை கைத்தறி ஆடைகளுக்கு 30% முதல் 50% வரை தள்ளுபடி வழங்கப்படும்.

தேசிய கைத்தறி கண்காட்சி சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியில் கைத்தறி ஆடைகளை தள்ளுபடி விலையில் வாங்க முடியும். கைத்தறி நெசவாளர்கள் பாரம்பரிய முறையில் நெசவு செய்த ஆடைகள் இங்கு கிடைக்கும்.

இன்றைய காலகட்டத்தில் பாரம்பரிய ஆடைகளைக் காண்பதே அரிதாகி விட்டது. ஆனால் கைத்தறி ஆடைகளை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்த மத்திய அரசு அவ்வப்போது கண்காட்சியை ஏற்பாடு செய்கிறது. அவ்வகையில் தற்போது சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் தேசிய கைத்தறி கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. இந்தக் கண்காட்சி வருகின்ற அக்டோபர் 17 ஆம் தேதி வரை நடைபெறும் என்பதால், பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைத்தறி கண்காட்சியில் பூம்​பட்​டு, புது​மணப்​பட்​டு, பேஸ்டல் கலெக் ஷன்​ஸ், கட்​டம் பட்​டு, பட்டு நூல் டிசைனர் சேலைகள், வெண்​ணிலா கலெக் ஷன்​ஸ், பருத்தி நூல் யோகா மேட், அனு​தினப்​பட்​டு, தாய்​-சேய் பெட்​டகம் மற்றும் தர்ப்பை புல் யோகா மேட் ஆகிய புதிய ரகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

கண்காட்சியில் 300-க்​கும் மேலான கைத்​தறி நெச​வாளர் கூட்​டுறவு சங்​கங்​களும், வெளிமாநில தலைமை நெச​வாளர் கூட்​டுறவு சங்​கங்​களு​டன் மத்​திய மற்றும் மாநில சிறப்பு முகமை நிறு​வனங்​களும் பங்கு பெற்றுள்ளன.

திரு​புவனம் பட்​டு, காஞ்​சிபுரம் பட்​டு, ஆரணி பட்டு சேலைகள், சேலம் வெண்​பட்டு வேட்​டிகள், அருப்​புக்​கோட்​டை, செட்​டி​நாடு, நெகமம், கோரா காட்​டன், மதுரை சுங்​குடி, செடிபுட்​டா, கூரை​நாடு, பரமக்​குடி புதினம், காஞ்சி காட்​டன், ஆர்​கானிக் சேலைகள் மற்றும் மென்​பட்டு சேலைகள் கைத்தறி கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்​ளன.

இதுமட்டுமின்றி கரூர் பெட்​சீட், சென்​னிமலை பெட்​சீட் மற்​றும் ஏற்​றுமதி ரகங்​களுடன், வெளி மாநிலங்​களின் பிரசித்தி பெற்ற ஆடைகளும் விற்​பனைக்கு வைக்​கப்​பட்​டுள்​ளன.

இதையும் படியுங்கள்:
மெட்ரோ ரயில் பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பு! இதைச் செய்தால் 20% தள்ளுபடி!
50% discount on Handloom dresses

கைத்தறி கண்காட்சி வருகின்ற 17 ஆம் தேதி வரை தின​ந்தோறும் காலை 10 மணி​ முதல் இரவு 9 மணி வரை, 15 நாட்​களுக்கு கலை​வாணர் அரங்​கில் நடை​பெறும். தமிழ்​நாடு கைத்​தறி நெச​வாளர் கூட்​டுறவுச் சங்​கங்​கள் விற்பனை செய்​யும் கைத்​தறி ரகங்​களுக்கு 30% முதல் 50% வரை சிறப்​புத் தள்​ளு​படி வழங்​கப்​படும் எனவும் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் கைத்தறி கண்காட்சி நடைபெறுகிறது. ஆகையால் இந்தக் கண்காட்சிக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவசியம்.

இதையும் படியுங்கள்:
அக்டோபர் 17 வரை மட்டுமே கிடைக்கும் LIC-யின் சிறப்புத் திட்டம்..! என்னன்னு உடனே பாருங்க..!
50% discount on Handloom dresses

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com