

தேர்தல் பிரச்சாரத்திற்காக இன்று (ஏப்ரல்.15) தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி , தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் பாஜக தலைவர்கள் அண்ணாமலை மற்றும் பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் ரோடு ஷோவை நாகர்கோவிலில் துவக்கினார்.
தேர்தல் பிரச்சாரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி வாக்கு சேகரித்தார். அவர் கூட்டணி கட்சி வேட்பாளர்களுடன் கலந்துரையாடும் போது தமிழக சட்டமன்ற தேர்தலில் தே.ஜ.கூ நிச்சயமாக வெற்றி பெறும் , திமுக கட்டாயமாக தோற்கும். ஊழல் நிறைந்த தவறான நிர்வாகத்தை கொண்டுள்ள திமுகவை தமிழ்நாடு விரும்பவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. தமிழகத்தில் மக்களை முதன்மையாகக் கொண்ட சிறப்பான ஒரு ஆட்சியை தேசிய ஜனநாயக கூட்டணி வழங்கும் என்று கூறினார்.
தமிழகம் வளர்ச்சி பெற்ற மாநிலமாக இருக்கவும் சிறந்த மாநிலமாக இருக்கவும் தங்களது கூட்டணிக்கு வாக்களிக்குமாறு பிரதமர் கேட்டுக்கொண்டார்.