கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.வை கலாய்த்த நெட்டிசன்கள்!

கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.வை கலாய்த்த நெட்டிசன்கள்!
S CHANDRA MOULI

எஸ். சந்திர மௌலி (S Chandra Mouli) எஸ். சந்திர மௌலி கடந்த நாற்பதாண்டுகளாக கல்கி குழும பத்திரிகைகளில் எழுதிவரும் மூத்த பத்திரிகையாளர். கல்கி வெளியிட்ட பல்வேறு சிறப்பிதழ்கள், மற்றும் தீபாவளி மலர்கள், தொழில் மலர்கள், விடுமுறை மலர்களுக்காக இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணம் செய்தவர். 2008ல் கல்கி வெளியிட்ட “குஜராத் டுடே” சிறப்பிதகளுக்காக ஒரு வார காலம் குஜராத் முழுவதும் பயணித்து, குஜராத்தின் வளர்ச்சியை நேரில் கண்டு, எழுதியவர். சமூக அக்கறையோடு கல்கி மேற்கொண்ட “மாதம் ஒரு மாவட்டம்” திட்டத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கும் பயணித்து பங்களித்தவர். வாஜ்பாய், வி.பி.சிங் தொடங்கி மன்மோகன் சிங், நரேந்திர மோடி வரை ஏழு இந்தியப் பிரதமர்களை சந்தித்து பேட்டி கண்டவர். எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, என்.டி.ஆர், ஜோதி பாசு, வெங்கையா நாயுடு, நிர்மலா சீதாராமன், சிவாஜி கணேசன், ரஜினி காந்த், கமலாசன், ஜெமினிகணேசன், சூர்யா, மணிரத்னம், கிரிக்கெட்டர் ஸ்ரீக்காந்த், விக்கு வினாயகராம். உமையாள்புரம் சிவராமன், வயலின் கன்யாகுமரி, ஜெயகாந்தன், நாஞ்சில் நாடன், கவிஞர் வைரமுத்து, கவிஞர் மு.மேத்தா, நா. முத்துகுமார், சோ ராமசாமி என பல்துறைப் பிரபலங்களையும் பேட்டி கண்டு எழுதியவர். இயக்குனர் ஸ்ரீதர், நடிகர் நாகேஷ், ஓவியர் கோபுலு, இயக்குனர் எஸ்பி. முத்துராமன், திருமதி ஒய்,ஜி.பி. ஃபிலிம் நியூஸ் ஆனந்தன், நடிகர் ஏ.ஆர்.எஸ். மெஜிக் நிபுணர் லால் உள்ளிட்ட பலரது வாழ்க்கை அனுபவங்களை இவர் தொடராக எழுதி, அவை பின்னர் புத்தகங்களாக வெளியாகி உள்ளன. இயக்குனர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானபோது, இளைய தலைமுறையினருக்கு அமரர் கல்கி பன்முகச் சாதனை வாழ்க்கையை அறிமுகப்படுத்தும் நோக்கத்துடன் “கல்கி-பொன்னியின் செல்வர்” என்ற தலைப்பில் அவரது வாழ்க்கை வரலாற்றை சுவைபட எழுதியவர். பெண்சிசுக் கொலை தொடர்பான கட்டுரைக்கு “லாட்லி விருதும்”, ரோட்டரி சங்கத்தின் “சாதனை விருதும்” பெற்றவர். தற்போது madraspaper இணைய வார இதழில் “ஓரு குடும்பக் கதை: என்ற தலைப்பில் இந்திய அரசியலில் நேரு குடும்பத்தின் பங்களிப்பு குறித்த நெடுந்தொடர் ஒன்றை எழுதி வருகிறார். சோ குறித்த ஒரு புத்தகத்தை எழுதிக் கொண்டிருக்கிறார்.

Updated on

கேரளாவைச் சேர்ந்த வழக்கறிஞர் வி.கே.பிரசாந்த். இவர் இடதுசாரிக் கூட்டணியின் பிரதான கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர். 2015ஆம் ஆண்டு நடைபெற்ற திருவனந்தபுரம் மாநகராட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற இவர், திருவனந்தபுரத்தின் மேயர் ஆனார்.

அதன் பின்னர் 2019ல் வட்டியூர்க்காவு தொகுதியில் நடைபெற்ற சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கட்சி தொண்டர்களோடும், பொது மக்களோடும் எளிமையாக பழகுபவர் என்பதால், திருவனந்தபுரம் மேயராக இருந்தபோது இவர், ‘மேயர் புரோ’ என்று பிரபலமாக அழைக்கப்பட்டார்.

சமூக ஊடகங்களில் மிகவும் சுறுசுறுப்பாகவும், பரபரப்பாகவும் இயங்கும் இவரை, முகநூலில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை சுமார் மூன்றரை லட்சம் பேர். தொகுதியில், அரசு அதிகாரிகளையும், கட்சிக்காரர்களையும் கொண்டு ஏராளமான ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி, வளர்ச்சிப் பணிகளையும் இவர் மேற்கொண்டு வருகிறார்.

மீபத்தில் அவரது அதீதமான சமூக ஊடக செயல்பாடுகள் பொது மக்கள் மத்தியிலும், சமூக ஊடகங்களிலும் பெரும் விவாதப் பொருளாயின. இதனால் கேரளாவைச் சேர்ந்த நெட்டிசன்கள் இவரை ரொம்பவே கலாய்த்து விட்டார்கள். அண்மையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா-இந்தியா கிரிக்கெட் போட்டியின்போது, நேரலையாக இவர் ஸ்கோர்களை அப்டேட் செய்தபடியே இருந்தார். இதுதான் நெட்டிசன்களின் இந்த சர்ச்சைக்கு வித்திட்டது.

‘பல்வேறு கிரிக்கெட் இணையதளங்கள் செய்யும் வேலையை ஒரு எம்.எல்.ஏ. எதற்கு செய்ய வேண்டும்? அவருக்கு மக்கள் பிரச்னைகள் பற்றியெல்லாம் அக்கறை இல்லையா?’ என்றெல்லாம் பதிவுகள் போட்டுத் தாக்கத் துவங்கிவிட்டார்கள்.

இவற்றைப் பார்த்த எம்.எல்.ஏ. பிரசாந்த், தான் தனது தொகுதி மக்களுக்காக செய்த பணிகளைப் பட்டியல் போட்டுவிட்டு, ‘என்னுடைய ஓய்வு நேரத்தில்தான், குறிப்பாக இரவு நேரத்தில்தான் நான் கிரிக்கெட், ஃபுட்பால் மேட்ச்களை பார்க்கிறேன். அதனால் எனது எம்.எல்.ஏ. பணிகள் எதுவும் தாமதமாவதும் இல்லை; தடை படுவதும் இல்லை’ என்று விளக்கம் கொடுத்து இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தார்.

logo
Kalki Online
kalkionline.com