கல்லூரியெல்லாம் வேண்டாம்… சாட் ஜிபிடியே போதும் - ஓபன்ஏஐ நிறுவனர் ஓபன் டாக்..!

Open AI founderSam Altman
Open AI founder
Published on

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி, பல்வேறு துறைகளில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. கல்வித் துறையும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்நிலையில், ChatGPT போன்ற சக்திவாய்ந்த AI கருவிகளை உருவாக்கிய OpenAI நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன், கல்வி குறித்து ஒரு பரபரப்பான கருத்தை வெளியிட்டுள்ளார். எதிர்காலத்தில் கல்லூரிப் படிப்பின் தேவை குறைந்து, AI கருவிகள் கற்றலுக்குப் போதுமானதாக இருக்கும் என்ற தனது எதிர்பார்ப்பை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

சாம் ஆல்ட்மேன் தனது சமீபத்திய பேச்சில், "சில ஆண்டுகளில் வரும் அடுத்த தலைமுறையினருக்கு கல்வி மிகவும் வித்தியாசமானதாக இருக்கும். AI இல்லாத உலகத்தை அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள்," என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது மகன் கல்லூரிக்குச் செல்வார் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்றும், ஏனெனில் AI ஆனது கற்றலில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம், இனி பாடப் புத்தகங்கள், விரிவுரைகள் என்ற பாரம்பரிய கல்வி முறைக்கு பதிலாக, AI அடிப்படையிலான தனிப்பயனாக்கப்பட்ட கற்றல் முறைக்கு முக்கியத்துவம் கிடைக்கும் என்பதை அவர் உணர்த்தியுள்ளார்.

இது மாணவர்களுக்கு ஒரு நல்ல செய்தி என்றாலும், கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் ஒருவித கவலையை ஏற்படுத்தியுள்ளது. AI கருவிகள் தகவல்களை எளிதில் அணுகவும், சிக்கல்களைத் தீர்க்கவும் உதவுவதால், மாணவர்கள் தங்களுக்குத் தேவையான அறிவை கல்லூரிகளுக்குச் செல்லாமலேயே பெற்றுக்கொள்ள முடியும் என்ற சாத்தியக்கூறை ஆல்ட்மேன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இருப்பினும், சாம் ஆல்ட்மேன், ChatGPT போன்ற AI கருவிகளை கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளார். மனிதர்களுக்கு இணையான உணர்வுகள், குறிப்பாக மனம் சார்ந்த பிரச்சனைகளுக்கு உருவாக்கப்படும் சாட்போட்கள் மனிதர்களுக்கு இணையான உணர்வுடன் இருப்பதில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதையும் படியுங்கள்:
சபரிமலைக்கு பெண்கள் செல்லலாமா?
Open AI founderSam Altman

மொத்தத்தில், சாம் ஆல்ட்மேனின் இந்த கருத்து, எதிர்காலக் கல்வியின் திசை குறித்து ஒரு முக்கியமான விவாதத்தைத் தொடங்கியுள்ளது. AI தொழில்நுட்பம் கல்வி முறையை எவ்வாறு மறுவடிவமைக்கும் என்பதையும், மாணவர்கள் எவ்வாறு அறிவைப் பெறுவார்கள் என்பதையும் இது கேள்விக்குள்ளாக்குகிறது. பாரம்பரிய கல்வி நிறுவனங்கள் இந்த மாற்றத்திற்கு எவ்வாறு பழகிக்கொள்ளப் போகின்றார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com