நம்பமுடியாத அறிவிப்பு..! இனி மெரினா மட்டுமல்ல... சென்னைக்கு அடுத்தடுத்து 3 புதிய ப்ளூ ஃப்ளாக் கடற்கரைகள்!

Blue flag
Blue flag
பாரதி

Hii… I am Kavi Bharathi. Working as a Content Writer in the name Bharathi. Experiencing in Writing and Social Media Handling. And probably writing in News, Sports News, Cinema News, Art/Culture, Beauty/Fashion. Working hard to grab your attention through my contents. I will try my best to fulfill your expectations.

Updated on

சென்னைவாசிகளுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தி! ஏற்கனவே ப்ளூ ஃப்ளாக் சான்றிதழ் பெற்று உலகத் தரத்தை எட்டியுள்ள மெரினா கடற்கரை மட்டுமின்றி, இனி திருவான்மியூர், பாலவாக்கம் மற்றும் உத்தண்டி கடற்கரைகளும் ப்ளூ ஃப்ளாக் சான்றிதழ் பெற தயாராகி வருகின்றன.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, குளிப்பதற்கு உகந்த நீர் தரம், பாதுகாப்பு வசதிகள், கழிவு மேலாண்மை, கடற்கரை தூய்மை, தகவல் பலகைகள் போன்ற 33 கடுமையான விதிமுறைகளை பூர்த்தி செய்யும் கடற்கரைகளுக்கு மட்டுமே டென்மார்க்கின் சுற்றுச்சூழல் கல்வி அறக்கட்டளை (FEE) ப்ளூ ஃப்ளாக் சான்றிதழை வழங்குகிறது. மெரினா கடற்கரை ஏற்கனவே இந்தச் சான்றிதழைப் பெற்று, அதன் தூய்மையையும் பாதுகாப்பையும் மேம்படுத்தி வருகிறது. தற்போது, இந்த மூன்று கடற்கரைகளிலும் தேவையான வசதிகளை மேம்படுத்துவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மெரினா கடற்கரையில் மாநகராட்சி பல்வேறு மேம்பாட்டு வசதிகளைச் செய்துள்ளது. நீச்சல் குளத்தைச் சுற்றியுள்ள 30 ஏக்கர் பரப்பளவில் பின்வரும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன:

அமரும் வசதிகள்: 40 மூங்கில் இருக்கைகள் மற்றும் 20 குடைகள்.

பாதுகாப்பு: நான்கு கண்காணிப்பு கோபுரங்கள் மற்றும் 20 சிசிடிவி கேமராக்கள்.

குழந்தைகளுக்கான பகுதிகள்: விளையாட்டு உபகரணங்களுடன் கூடிய நான்கு குழந்தைகள் விளையாட்டு பகுதிகள்.

பொழுதுபோக்கு: இரண்டு Selfie points.

சுகாதாரம்: 24 ஜோடி மூங்கில் குப்பைத் தொட்டிகள்.

உடற்பயிற்சி: திறந்தவெளி உடற்பயிற்சி உபகரணங்கள்.

இதையும் படியுங்கள்:
டிஜெம்பே: வெறும் இசைக்கருவி மட்டுமல்ல, இதன் பின்னணியில் இருக்கும் உண்மைகள் தெரியுமா?
Blue flag

இது தவிர, மேலும் பல சிறப்பு வசதிகளும் சேர்க்கப்பட்டுள்ளன:

நுழைவு வளைவு: 40 அடி அகலம் மற்றும் 30 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட மூங்கில் வளைவு.

மன அமைதிக்கு: தியான இடம் (30 அடி x 30 அடி).

படிப்பதற்கு: வாசிப்பு இடம் (16 அடி x 16 அடி).

மாற்றுத்திறனாளிகளுக்கான வசதி: 30 சக்கர நாற்காலிகள் மற்றும் சிறப்பு கழிப்பறைகள்.

மேலும் திருவான்மியூர், பாலவாக்கம், உத்தண்டி கடற்கரைகள் சென்னையின் கிழக்குக் கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள பிரபலமான சுற்றுலாத் தலங்கள். இந்த கடற்கரைகள் ப்ளூ ஃப்ளாக் அந்தஸ்தைப் பெறுவதன் மூலம், இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு சர்வதேச தரத்திலான பாதுகாப்பும், சுகாதாரமான சுற்றுச்சூழலும் கிடைக்கும்.

குறிப்பாக, இந்த கடற்கரைகளில் சுத்தமான கழிப்பறைகள், பாதுகாப்பான குடிநீர் வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள், முதலுதவி மையங்கள், லைஃப் கார்டுகள் எனப் பல மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த நான்கு கடற்கரைகளிலும் மொத்தம் ரூ.24.80 கோடி செலவில் பணிகளை மேற்கொள்ள மாநகராட்சி டெண்டர் விட்டுள்ளது. இங்கு சாய்ந்த நாற்காலிகள், சிற்றுண்டிச்சாலை, உடற்பயிற்சி உபகரணங்கள், கண்காணிப்பு அமைப்பு மற்றும் நவீன நடைபாதைகள் போன்ற வசதிகள் ₹6 கோடி மதிப்பீட்டில் ஏற்படுத்தப்பட உள்ளன. வணிகர்கள் இங்கு கடைகள் அமைக்க அனுமதி இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
வெற்றிபெற வெறும் திறமை மட்டும் போதாது! வேறு என்ன தேவை தெரியுமா?
Blue flag

இந்த மூன்று கடற்கரைகளும் ப்ளூ ஃப்ளாக் சான்றிதழ் பெறுவது தமிழகத்தின் சுற்றுலாத் துறைக்கு ஒரு பெரிய ஊக்கத்தை அளிக்கும். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதோடு, உள்ளூர் மக்களும் தங்கள் விடுமுறை நாட்களைக் கொண்டாட முடியும். மேலும், இது கடற்கரை சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து, பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும்.

தமிழக அரசு இந்தத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதன் மூலம், தமிழ்நாட்டின் கடற்கரைகளை உலக அளவில் அடையாளப்படுத்த முயற்சித்து வருகிறது. இந்த முயற்சி வெற்றி பெற்றால், இந்தியாவில் ஒரே நகரத்தில் இத்தனை ப்ளூ ஃப்ளாக் கடற்கரைகளைக் கொண்ட முதல் நகரமாக சென்னை திகழும். இது சென்னைக்கு மேலும் ஒரு பெருமையைச் சேர்க்கும் என்பதில் ஐயமில்லை. இந்த கடற்கரைகளில் விரைவில் மக்கள் புத்துணர்ச்சியுடன் உலாவரும் நாட்களை ஆவலுடன் எதிர்பார்க்கலாம்.

logo
Kalki Online
kalkionline.com