இனி குழந்தை நட்சத்திரங்கள் 5 மணி நேரத்துக்கு மேல் பணிபுரிய ஆப்பு வைத்துள்ள NCPCR!

இனி குழந்தை நட்சத்திரங்கள் 5 மணி நேரத்துக்கு மேல் பணிபுரிய ஆப்பு வைத்துள்ள NCPCR!

Published on

கலைத்துறையில் குழந்தை நட்சத்திரங்கள் பணிபுரியும் போது, அவர்களது பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPCR) புதிய சட்ட வரையறை விதிமுறைகளை அறிவித்துள்ளது.

குழந்தை நட்சத்திரங்கள் கலைத்துறையில் பணிபுரியும் போது அவர்களுக்கு எந்த துன்பமும் நேரிடாமல் இருக்க, பல்வேறு விஷயங்களை உள்ளடக்கியுள்ள சட்ட விதிமுறைகளை வரையறுத்துள்ள NCPCR அதன்படியே அவர்கள் பணி புரியும் முறையும் கையாளப்படுகிறது.

தற்போது NCPCR கலைத்துறையில் பணிபுரியும் குழந்தை நட்சத்திரங்களுக்கான புதிய சட்ட வரையறை விதிமுறைகளை அறிவித்துள்ளது.

ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள், நடிக்கவோ அல்லது ஊதியம் பெறக்கூடிய ஏதேனும் கலைதுறை தொடர்பான பணிகளில் ஈடுபடுத்தும்போது, அந்தக் குழந்தைகளின் பெற்றோரோ அல்லது அதிகாரபூர்வமான காப்பாளர்களோ அவர்களுடன் கட்டாயம் இருக்க வேண்டும்.

அதே போல், குழந்தைகளை நடிக்க வைக்கும் போது அந்த மாவட்ட ஆட்சியரிடம் உரிய அனுமதி பெற்றிருக்க வேண்டும்

தொடர்ச்சியாக 27 நாட்கள் குழந்தைகளை வேலைகளில் ஈடுபடுத்தக்கூடாது

ஒரே நாளில் ஐந்து மணி நேரத்துக்கு மேல் குழந்தைகளை வேலை செய்ய வைக்கக் கூடாது எனவும் தெரிவித்துள்ளது.

குழந்தைகள் அவர்கள் பள்ளிகளுக்கு செல்வதில் எந்தவித சிக்கல்களும் இருக்கக் கூடாது.

குழந்தைகளின் கல்வி உறுதிசெய்யப்படும் விதமாக அவர்கள் படிப்பை சரியாக தொடர முடியாத விஷயம் நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் NCPCR தெரிவித்துள்ளது.

இவ்வாறு தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் குழந்தைகளின் உரிமைகளை கவனித்து அவர்களை பாதுகாக்கும் பொறுப்பை கொண்டுள்ளது. குழந்தைகளின் அடிப்படை உரிமைகளான உயிர்வாழும் உரிமை, பாதுகாப்பு மற்றும் பங்கேற்பு உரிமை போன்றவற்றை பேணி பாதுகாக்கும் பொறுப்பை குறிக்கோளாக கொண்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com