செல்லப் பிராணிகள் வைத்திருப்போர் உஷார்! மாநகராட்சி விதிகளில் புதிய மாற்றம்..!

Dog
Dog
Published on

சென்னையில் செல்லப்பிராணிகள் வளர்ப்போர் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் ஒரு துயரச் சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. தடை செய்யப்பட்ட பிட்புல் ரக நாய் ஒன்று குமரன் நகரில் கருணாகரன் என்பவரை கடித்துக் குதறியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தில், நாயின் உரிமையாளர் பூங்கொடியும் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தத் துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, சென்னை மாநகராட்சி செல்லப்பிராணிகள் தொடர்பான விதிகளை கடுமையாக்கியுள்ளது. மத்திய அரசு ஏற்கனவே பிட்புல் உட்பட பல ஆபத்தான நாய் இனங்களின் இனப்பெருக்கம், விற்பனை மற்றும் இறக்குமதிக்குத் தடை விதித்துள்ள நிலையில், இந்த விதிகளுக்கு எதிராக சிலர் இன்னும் இந்த வகை நாய்களை வைத்திருப்பது சட்டவிரோதமானது என மாநகராட்சி எச்சரித்துள்ளது.

இதையும் படியுங்கள்:
தளபதி சொன்ன 'மாஸ்டர்' பிளான்: இந்த 5 டிப்ஸ் போதும்... நீங்கதான் அடுத்த கிங்!
Dog

மாநகராட்சியின் புதிய விதிமுறைகள்:

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், மாநகராட்சி சில முக்கிய விதிமுறைகளை அறிவித்துள்ளது:

  • கட்டாய உரிமம்: அனைத்து செல்லப்பிராணி உரிமையாளர்களும் மாநகராட்சியில் கட்டாயம் உரிமம் பெற வேண்டும்.

  • முகமூடி மற்றும் சங்கிலி: இனிமேல், நாய்களை வீதிகள், பூங்காக்கள், மற்றும் பொது இடங்களுக்கு அழைத்துச் செல்லும் போது முகமூடி மற்றும் சங்கிலி கட்டாயம் அணிவித்திருக்க வேண்டும்.

  • தடுப்பூசி: நாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட வேண்டும்.

  • பராமரிப்பு: செல்லப்பிராணிகளுக்கு உணவு, தண்ணீர், தங்குமிடம் போன்ற அடிப்படை வசதிகளைக் கட்டாயம் வழங்க வேண்டும்.

  • பொறுப்பான நடத்தை: ஒரே நேரத்தில் ஒரு செல்லப்பிராணி மட்டுமே வெளியே கொண்டு செல்ல அனுமதிக்கப்படும். மேலும், அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நாய்கள் மற்றவர்களுக்கு எந்தவித அச்சத்தையும் ஏற்படுத்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள்:
பூட்டான்: அமைதியும், ஆன்மீகமும் நிறைந்த அதிசய நாடு!
Dog

இந்த விதிமுறைகளை மீறுபவர்கள் மீது இந்திய விலங்குகள் நல வாரியத்தின் வழிகாட்டுதலின்படி கடுமையான கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. நாய் வளர்ப்போரின் பொறுப்பற்ற செயல், பொதுமக்களின் உயிருக்கும், மன அமைதிக்கும் அச்சுறுத்தலாக மாறக்கூடும் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது. எனவே, அனைவரும் இந்த விதிமுறைகளைப் பின்பற்றி, பாதுகாப்பான சமூகத்திற்கு ஒத்துழைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com