

சென்னை விமான நிலையத்தில் ப்ரீபெய்ட் டாக்சிகளை ஆன்லைனில் முன்பதிவு செய்வதற்கான புதிய மொபைல் செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பயணிகள் நீண்ட வரிசையில் கவுண்டரில் நின்று டாக்சி பெற வேண்டிய சிரமம் மற்றும் கூடுதல் கட்டணம் தொடர்பான புகார்களை தவிர்க்கும் வகையில் செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த டிஜிட்டல் வசதி மூலம், பயணிகள் எங்கிருந்தும் டாக்ஸியை முன்பதிவு செய்து, உறுதிப்படுத்தப்பட்ட முன்பதிவை ஊழியர்களிடம் காட்டி உடனடியாக வாகனத்தைப் பெறலாம்.
இந்த புதிய செயலி சென்னை விமான நிலைய ப்ரீபெய்ட் டாக்ஸி தொழிற்சங்கத்தால் பயணிகளின் சிரமத்தை குறைக்கும் நோக்கில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.