பாலியல் புகாரில் சிக்கியுள்ள பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ தனிப்படை போலீசாரால் இன்று கைது!

பாலியல் புகாரில் சிக்கியுள்ள பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ தனிப்படை போலீசாரால் இன்று கைது!

பாலியல் புகாரில் சிக்கியுள்ள பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ தனிப்படை போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டார். போலீசிற்கு பயந்து பண்ணை வீட்டில் பதுங்கியிருந்த பென்டிக்டை இன்று காலையில் காவல்துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர்.

பல பெண்களுடன் பழகி..அவர்களுடன் நெருக்கமாக புகைப்படமும் வீடியோவும் எடுத்து மிரட்டிய பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை பற்றி சமூகவலைத்தளங்களில் செய்திகள் வைரலாக பரவி வந்தது.இதையடுத்து பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ தலைமறைவானார். அவர் மீது நர்சிங் மாணவி ஒருவர் அளித்த புகாரின்பேரில் சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்றோ (29). இவர் குமரி மாவட்டத்தின் பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் பாதிரியாராகப் பணியாற்றி உள்ளார். இவர் சில பெண்களுடன் நெருக்கமாக இருப்பதை போன்று வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு அவர்களை மிரட்டியதாக கூறப்படுகிறது. மேலும், சில பெண்களுக்கு வாட்ஸ் அப் மூலம் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமா பாலியல் புகாரில் சிக்கியுள்ள பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ தனிப்படை போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டார்.

பேச்சிப்பாறை பகுதியைச் சேர்ந்த நர்சிங் மாணவி ஒருவர் அளித்த புகாரின்பேரில் சைபர் கிரைம் போலீசார் பாதிரியார் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பாதிரியாரை பிடிக்க சைபர் கிரைம் போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு ராஜேந்திரன் உத்தரவின்பேரில் 2 தனிப்படை அமைக்கப் பட்டது.

இந்நிலையில், பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை நாகர்கோவில் பால் பண்ணை பகுதியில் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக இவரின் ஆபாச வீடியோக்கள், வாட்ஸ்-அப் பதிவுகள் சமூக வலைதளங்களில் பரவி பலராலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com