ராஜஸ்தான்: காங்கிரஸின் அமைதித் தூதர் என்ன செய்யப் போகிறார்?

ராஜஸ்தான்: காங்கிரஸின் அமைதித் தூதர் என்ன செய்யப் போகிறார்?
S CHANDRA MOULI

எஸ். சந்திர மௌலி (S Chandra Mouli) எஸ். சந்திர மௌலி கடந்த நாற்பதாண்டுகளாக கல்கி குழும பத்திரிகைகளில் எழுதிவரும் மூத்த பத்திரிகையாளர். கல்கி வெளியிட்ட பல்வேறு சிறப்பிதழ்கள், மற்றும் தீபாவளி மலர்கள், தொழில் மலர்கள், விடுமுறை மலர்களுக்காக இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணம் செய்தவர். 2008ல் கல்கி வெளியிட்ட “குஜராத் டுடே” சிறப்பிதகளுக்காக ஒரு வார காலம் குஜராத் முழுவதும் பயணித்து, குஜராத்தின் வளர்ச்சியை நேரில் கண்டு, எழுதியவர். சமூக அக்கறையோடு கல்கி மேற்கொண்ட “மாதம் ஒரு மாவட்டம்” திட்டத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கும் பயணித்து பங்களித்தவர். வாஜ்பாய், வி.பி.சிங் தொடங்கி மன்மோகன் சிங், நரேந்திர மோடி வரை ஏழு இந்தியப் பிரதமர்களை சந்தித்து பேட்டி கண்டவர். எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, என்.டி.ஆர், ஜோதி பாசு, வெங்கையா நாயுடு, நிர்மலா சீதாராமன், சிவாஜி கணேசன், ரஜினி காந்த், கமலாசன், ஜெமினிகணேசன், சூர்யா, மணிரத்னம், கிரிக்கெட்டர் ஸ்ரீக்காந்த், விக்கு வினாயகராம். உமையாள்புரம் சிவராமன், வயலின் கன்யாகுமரி, ஜெயகாந்தன், நாஞ்சில் நாடன், கவிஞர் வைரமுத்து, கவிஞர் மு.மேத்தா, நா. முத்துகுமார், சோ ராமசாமி என பல்துறைப் பிரபலங்களையும் பேட்டி கண்டு எழுதியவர். இயக்குனர் ஸ்ரீதர், நடிகர் நாகேஷ், ஓவியர் கோபுலு, இயக்குனர் எஸ்பி. முத்துராமன், திருமதி ஒய்,ஜி.பி. ஃபிலிம் நியூஸ் ஆனந்தன், நடிகர் ஏ.ஆர்.எஸ். மெஜிக் நிபுணர் லால் உள்ளிட்ட பலரது வாழ்க்கை அனுபவங்களை இவர் தொடராக எழுதி, அவை பின்னர் புத்தகங்களாக வெளியாகி உள்ளன. இயக்குனர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானபோது, இளைய தலைமுறையினருக்கு அமரர் கல்கி பன்முகச் சாதனை வாழ்க்கையை அறிமுகப்படுத்தும் நோக்கத்துடன் “கல்கி-பொன்னியின் செல்வர்” என்ற தலைப்பில் அவரது வாழ்க்கை வரலாற்றை சுவைபட எழுதியவர். பெண்சிசுக் கொலை தொடர்பான கட்டுரைக்கு “லாட்லி விருதும்”, ரோட்டரி சங்கத்தின் “சாதனை விருதும்” பெற்றவர். தற்போது madraspaper இணைய வார இதழில் “ஓரு குடும்பக் கதை: என்ற தலைப்பில் இந்திய அரசியலில் நேரு குடும்பத்தின் பங்களிப்பு குறித்த நெடுந்தொடர் ஒன்றை எழுதி வருகிறார். சோ குறித்த ஒரு புத்தகத்தை எழுதிக் கொண்டிருக்கிறார்.

Updated on

ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரை டிசம்பர் முதல் வாரத்தில்  ராஜஸ்தானில் நுழைகிறது.  ஆனால், அங்கேயோ முதலமைச்சர் அஷோக் கெலாட்டுக்கும், அவருக்கு எதிராக அரசியல் செய்யும் அதிருப்தி காங்கிரஸ் தலைவரான சச்சின் பைலட்டுக்கும் மோதல் உச்சத்தில் இருக்கிறது.

ராகுல் காந்தி ராஜஸ்தானில் நடை பயணம் மேற்கொள்ளும்போது, இவர்கள் மோதலால் ரசாபாசமாக ஏதாவது ஆகிவிடுமோ என்று ஒட்டு மொத்த காங்கிரஸ் கட்சியும் கவலையில் ஆழ்ந்துள்ளது.

இதற்காக, அங்கே சென்று, இரு தரப்பினருக்கும் இடையில் சமாதானப் பேச்சு வார்த்தை நடத்த  அங்கே அனுப்பப்பட்டு இருக்கிறார்  ராகுலுக்கு மிகவும் நெருக்கமான கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவரான கே.சி. வேணுகோபால்.

வேணுகோபால் நடத்தவிருக்கும் கட்சியின் ஆய்வுக் கூட்டத்தில் அஷோக் கெலாட், சச்சின் பைலட் இருவருடன் ராஜஸ்தானின்  மற்ற முக்கிய காங்கிரஸ் தலைவர்களும் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

கெலாட், சச்சின் பைலட் இருவரும் ‘ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வரவேண்டும்’ என்று நினைக்கிறார்கள். ஆனால், அவர்களில் யாருக்கு முக்கியத்துவம் கொடுப்பது? யாரைக் கழற்றி விடுவது?  என்பதை கறாராக முடிவெடுக்க கட்சித் தலைமை மிகவும் தயங்குகிறது.

சோனியாவே முன் மொழிந்தும் கூட காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பதவியை ஏற்க கெலாட் ஆர்வம் காட்டவில்லை. அதற்குக் காரணம், கட்சித் தலைமை ஏற்பதற்காக ராஜஸ்தான் முதல்வர் பதவியை இழக்க அவர் தயாராக இல்லை என்பதுதான்.

அவர் கட்சிக்குத் தலைமை ஏற்று டெல்லி சென்றுவிட்டால், சச்சின் முதல்வர் நாற்காலியில் உட்கார்ந்துவிடுவார். அதன்பின் தன் நிலை “திரிசங்கு சொர்கம்தான்” என்ற பயம் அவருக்கு. 

அஷோக் கெலாட், சச்சினை “துரோகி” என்று வசை பாடுகிறார். அவரை எக்காரணம் கொண்டும் “முதல்வர் நாற்காலியில் அமர்த்தக் கூடாது” என்பது கட்சி மேலித்திடம் வலியுறுத்துகிறார்.

“இப்படி இருவரும் மோதிக்கொண்டால், அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் இருவரும் ஒருவர் காலை ஒருவர் வாரிவிட்டு, முதல்வர்  நாற்காலியை பா.ஜ.க.வுக்கு தாம்பாளத்தில் வைத்துக் கொடுத்துவிடுவார்கள்” என்று அடிமட்டத் தொண்டரும் கவலைப்படுகிறார். மேலிடமும் கையைப் பிசைந்துகொண்டு நிற்கிறது.

logo
Kalki Online
kalkionline.com