

தமிழ்நாட்டில் விரைவில் காலியாக உள்ள ஆறு மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான ராஜ்ய சபா தேர்தல் வருகிற மார்ச் 16ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
தமிழகத்தை பொறுத்த வரைக்கும் திருச்சி சிவா , கனிமொழி சோமு, ஜி.கே வாசன் உள்ளிட்ட ஆறு பேரின் எம்.பிக்களின் பதவிக்காலம் நிறைவடைகிறது. இதனை ஒட்டி ஆறு மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் வரும் 16 -ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.
தமிழகத்தில் காலியாக உள்ள ஆறு ராஜ்யசபா எம்.பி., பதவிகளுக்கான தேர்தல், வரும், 16ம் தேதி நடக்கும் என, இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது. எம்எல்ஏக்கள் எண்ணிக்கை அடிப்படையில், திமுகவிற்கு நான்கு, அதிமுகவிற்கு இரண்டு ராஜ்யசபா எம்பிக்கள் பதவி கிடைப்பது உறுதியானது.
திமுக கூட்டணியில், தேமுதிக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டது.திமுகவில் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்; தேமுதிக சார்பில் சுதீஷ், காங்கிரஸ் சார்பில் கிறிஸ்டோபர் திலக் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதிமுக சார்பில் தம்பிதுரை, அக்கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அன்புமணி மனு தாக்கல் செய்தனர். அவர்கள் மனு ஏற்கப்பட்டு, மற்றவர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மனுவை திரும்ப பெற, இன்று மாலை வரை, அவகாசம் வழங்கப்பட்டது. ஆறு பேர் தவிர, மற்றவர்கள் யாரும் களத்தில் இல்லை.
இதனையடுத்து திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், சுதீஷ், கிறிஸ்டோபர் திலக், தம்பிதுரை, அன்புமணி ஆகியோர் ராஜ்யசபாவுக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக ராஜ்யசபா தேர்தல் நடத்தும் அதிகாரி சாந்தி அறிவித்துள்ளார்.