ஒரு லிட்டர் பால் வாங்க ஆசைப்பட்டு ரூ.18.5 லட்சம் இழந்த மூதாட்டி! உஷாரய்யா உஷார்..!

MILK SCAM IN MUMBAI
MILK SCAM IN MUMBAI
பாரதி

Hii… I am Kavi Bharathi. Working as a Content Writer in the name Bharathi. Experiencing in Writing and Social Media Handling. And probably writing in News, Sports News, Cinema News, Art/Culture, Beauty/Fashion. Working hard to grab your attention through my contents. I will try my best to fulfill your expectations.

Updated on

மும்பையின் வடாலா பகுதியைச் சேர்ந்த 71 வயதான மூதாட்டி ஒருவர், ஆன்லைன் மூலமாக பால் ஆர்டர் செய்ய முயன்றபோது, சைபர் குற்றவாளிகளால் ரூ.18.5 லட்சம் மோசடி செய்யப்பட்டு பெரும் தொகையை இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் நடந்த இந்தச் சம்பவம் குறித்து, பாதிக்கப்பட்ட மூதாட்டி மத்திய சைபர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின்படி, ஒரு லிட்டர் பால் ஆர்டர் செய்வதற்காக ஆன்லைன் செயலி ஒன்றைப் பயன்படுத்தியுள்ளார். அப்போது, "தீபக்" என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட மர்ம நபர் ஒருவர், பால் விநியோக நிறுவனம் சார்பில் பேசுவதாகக் கூறி, மூதாட்டியின் தொலைபேசிக்கு ஒரு இணைப்பை (link) அனுப்பியுள்ளார்.

அந்த இணைப்பைக் கிளிக் செய்து விவரங்களை நிரப்புமாறு அவர் மூதாட்டியை வற்புறுத்தியுள்ளார். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக, மூதாட்டி அந்த அழைப்பில் இருந்தபோது, மோசடிக்காரர் பல்வேறு நுட்பமான கேள்விகளைக் கேட்டு அவரது தனிப்பட்ட மற்றும் வங்கி விவரங்களைச் சேகரித்துள்ளார். அடுத்த நாளும் அதே நபர் மூதாட்டியைத் தொடர்பு கொண்டு மேலும் சில விவரங்களைப் பெற்றுள்ளார். இதன் விளைவாக, மோசடிக்காரர்கள் மூதாட்டியின் தொலைபேசியை தொலைவிலிருந்து கட்டுப்படுத்தும் (remote access) வசதியைப் பெற்றுள்ளனர்.

இந்த அணுகலைப் பயன்படுத்தி, மோசடிக்காரர்கள் இரண்டு நாட்களில் மூதாட்டியின் மூன்று வங்கிக் கணக்குகளிலிருந்தும் மொத்தமாக ரூ.18.5 லட்சம் பணத்தை எடுத்துள்ளனர். வங்கிக் கணக்கில் இருந்த பணம் காணாமல் போனதை அறிந்த மூதாட்டி, அதிர்ச்சியடைந்து காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
தென் தமிழகத்தின் அடையாளம்! ஏன் வைகை எக்ஸ்பிரஸ் இன்றும் தனிச்சிறப்பு பெறுகிறது?
MILK SCAM IN MUMBAI

இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள மத்திய சைபர் காவல்துறை, பணத்தை எடுத்துக்கொண்ட வங்கிக் கணக்குகளைத் தேடி வருகின்றனர். மேலும், இதுபோன்ற ஆன்லைன் மோசடிகளில் இருந்து பொதுமக்கள், குறிப்பாக முதியவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது. தனிப்பட்ட மற்றும் வங்கி விவரங்கள், ஓடிபி (OTP) ஆகியவற்றை யாரிடமும் பகிர வேண்டாம் என்றும், அறிமுகமில்லாத இணைப்புகளை ஒருபோதும் கிளிக் செய்ய வேண்டாம் என்றும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

logo
Kalki Online
kalkionline.com