
வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் படிக்கச் செல்லும் கல்லூரி மாணவ, மாணவிகள் உதவித் தொகை பெறுவதற்கான வழிமுறைகளை தமிழ்நாடு அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாப்செட்கோ) ஒவ்வொரு வருடமும் 100 மாணவ, மாணவியர்களுக்கு வெளிநாட்டு பல்கலைக் கழகங்களில் உயர்கல்வியை படிப்பதற்காக கடனை வழங்கி வருகிறது. இத்திட்டத்தால் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர் ஆகியோர் பயனடைய முடியும். இந்த வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் வங்கிகள் மூலம் 36 லட்சம் ரூபாய் வரை இத்திட்டத்தின் மூலம் கல்வி உதவித் தொகையினை பெற முடியும்.இந்த கல்வி உதவித் தொகையை பெற் www.tabcedco.tn.gov.in என்ற இணையதள முகவரியில் உள்ள விண்ணப்பப் படிவத்தினை கல்வி உதவி பெற விரும்பும் மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொண்டு விண்ணப்பிக்க முடியும். இதற்கான இறுதித் தேதி அக்டோபர் மாத இறுதி நாளாகும்.
கடன பெறத் தகுதியான மாணவர்கள் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் வகுப்பினர் மட்டுமே ஆவர். அரசினால் வழங்கப்பட்ட சாதிச் சான்றிதழினை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் கிராமம், நகர்ப்புறம் பாகுபாடின்றி ரூ. 3.00 இலட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். மாநில அரசின் தகுதிவாய்ந்த அதிகாரியால் வழங்கப்பட்ட வருமானச் சான்றிதழை விண்ணப்பத்துடன் இணக்க வேண்டும் அல்லது வர்த்தமானி பதிவு பெற்ற அதிகாரியால் (Gazetted Officer) சான்றளிக்கப்பட்ட சுய சான்றளிக்கப்பட்ட ஆண்டு குடும்ப வருமானச் சான்றிதழினை விண்ணப்பத்துடன் இணக்கலாம்.
மேலும்,விண்ணப்பதாரர் மருத்துவம், பல் மருத்துவம், பொறியியல் படிப்புகள், பிஎச்.டி, முதுகலை பட்டப்படிப்புகள் போன்றவற்றில் முதுகலைப் படிப்புகளுக்கு, பொருத்தமான அதிகாரியால் அங்கீகரிக்கப்பட்ட தரப்படுத்தப்பட்ட தேர்வு மதிப்பெண்கள்,அதாவது SAT. GMAT. GRE அல்லது பாடநெறியில் சேருவதற்குப் பொருந்தக்கூடிய பிற தொடர்புடைய மதிப்பெண்கள் போன்றவை மூலம் சேர்க்கையை பெற்றிருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட நிறுவனத்திலிருந்து சேர்க்கை அனுமதிக் கடிதத்தை பெற்றிருக்கவேண்டும்.
தகுதியுள்ள தேர்ந்தெடுக்கப்படும் மாணவர் ஒருவருக்கு வழங்கப்படும் அதிகபட்சக் கடன் வரம்பு ரூ.15,00,000/- ஆகும்.கடன் தொகையில் 85%, புதுதில்லியின் தேசிய பிற்படுத்தப்பட்டோர் நிதி மற்றும் வளர்ச்சிக் கழகமும், மீதமுள்ள 15% அதாவது ரூ. 2.25 இலட்சம் தொகையை தமிழ்நாடு அரசும் விண்ணப்பதாரர்களுக்கு வழங்கும்.
கடன் தொகையில் சேர்க்கைக் கட்டணம், கல்விக் கட்டணம், புத்தகங்கள், எழுதுபொருட்கள், தேர்வுக் கட்டணம், ஆய்வகக்கட்டணம், நூலகக் கட்டணம், உறையுள் கட்டணங்கள்,கடன் காலத்திற்கான காப்பீட்டு கட்டணங்கள் ஆகியவை அடங்கும். கல்விக்கடனுக்கான வட்டி விகிதம் ஆண்டிற்கு 8% ஆகும்.
மாணவர் கல்வி நிறுவனத்திற்கு அவ்வப்போது செலுத்தப்பட வேண்டிய கட்டணத்தின் (செமஸ்டர் அல்லது அரையாண்டு) அடிப்படையில் கடன் தொகை தவணை முறையில் விடுவிக்கப்படும். முந்தைய ஆண்டுகளில் தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் மட்டுமே தொடர்ந்து கட்டணத் தவணைகள் விடுவிக்கப்படும். இதைப் பெறுவதற்கான வயது வரம்பு 21 முதல் 40 வயது வரை ஆகும். வழங்கப்படும் கடன்தொகை பாடத்தின் வகை மற்றும் காலத்தைப் பொருத்து மாறுபடாது.மாணவர்களிடமிருந்து மீளச் செலுவதற்கான தடைக்காலம் அனைவருக்கும் 5 ஆண்டுகளாகும்.
மாணவர்கள் தான் பெறும் கடனை அதிக பட்சமாக 10 ஆண்டுகளில் முழுவதுமாக திருப்பி செலுத்தப்பட வேண்டும்..இது 5 வருட தடைக்காலத்தையும் உள்ளடக்கியது.கடனைத் திருப்பிச் செலுத்தத் தொடங்கிய பிறகு, எப்போது வேண்டுமானாலும் கடனைத் திருப்பிச் செலுத்தலாம். இதற்கான முன் கட்டணம் எதுவும் செலுத்ததேவையில்லை.
விண்ணப்பப் படிவம் இக்கழக இணையதள முகவரியில் (www.tabcedcotn.gov.in) தற்போது வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் கடன் விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து வங்கி கோரும் ஆவண நகல்களுடன் சம்மந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், கூட்டுறவு வங்கி போன்ற ஏதேனும் ஒன்றில் இம்மாத இறுதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மாணவர்கள் அரசின் இச்சலுகையினை முறையான திட்டமிடுதலுடன் பயன்படுத்திக் கொண்டு வாழ்வில் உயர்நிலைக்கு வரலாம்.