

மேட்டுப்பாளையத்தில் அதிமுகவின் பொதுச் செயலாளர் என எடப்பாடி பழனிச்சாமி இன்றைய பிரச்சாரத்தில் , திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள 8000 ரூபாய் கூப்பனை பற்றி கடுமையாக விமர்சித்தார்.
ஆட்சியில் இருந்த போது எதுவும் செய்யாமல் இப்போது ஸ்டாலின் கூப்பன் கொடுக்கிறாராம். அவர் எதற்காக கூப்பன் கொடுக்கிறார் தெரியுமா? அதில் ஒரு கமிஷன் வரும் என்று கொடுக்கிறார். திமுககாரர்கள் எல்லாம் கூப்பனை விற்கிறார்கள். திமுக 100% ஆட்சிக்கு வரப்போவதில்லை!
அவர்களின் தேர்தல் அறிக்கைகள் கூட , கருணாநிதியின் குடும்பத்திற்கு என்ன லாபம் கிடைக்கும்? என்பதை அடிப்படையாகக் கொண்டே தயாரித்துள்ளார். இதே அதிமுகவின் தேர்தல் அறிக்கையை பாருங்கள்!
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10000 ரூபாய் சிறப்பு நிதியாக வங்கியில் செலுத்தப்படும். நாங்கள் வங்கியில் பணம் போட பார்க்கிறோம்! அவரோ தங்கள் குடும்ப வங்கியில் போட பார்க்கிறார்! திமுகவின் கூப்பன் அறிவிப்பில் ஒரு உயிர் போனதுதான் மிச்சம். என்று எடப்பாடி பழனிச்சாமி தனது பிரச்சாரத்தில் பேசியுள்ளார்!