

தேசிய பங்குச் சந்தை (NSE) மற்றும் பம்பாய் பங்குச் சந்தை (BSE) ஆகியவை மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு மார்ச் 31, செவ்வாய்க்கிழமையும், புனித வெள்ளியை முன்னிட்டு ஏப்ரல் 3, வெள்ளிக்கிழமையும் மூடப்பட்டிருக்கும். இதன் காரணமாக, இந்த வாரம் வர்த்தகம் மூன்று நாட்கள் மட்டுமே நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
2026-ஆம் ஆண்டில், பங்குச் சந்தை மொத்தம் 16 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும்.வார இறுதி நாட்கள் தவிர்த்து, மொத்தம் 16 நாட்கள் பொது விடுமுறை காரணமாக வர்த்தகம் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சில விடுமுறை நாட்கள் ஏற்கனவே கடந்துவிட்ட நிலையில், இனி வரும் மாதங்களில் சந்தை மூடப்படவுள்ள முக்கிய தினங்களின் பட்டியல் இதோ:
ஏப்ரல் 14-ஆம் தேதி அம்பேத்கர் ஜெயந்திக்காகவும், மே 1-ஆம் தேதி மகாராஷ்டிர தினத்திற்காகவும், மே 28-ஆம் தேதி பக்ரீத் பண்டிகைக்காகவும் சந்தை மூடப்பட்டிருக்கும்.ஆண்டின் இரண்டாம் பாதியில் பல விடுமுறை நாட்களும் திட்டமிடப்பட்டுள்ளன. ஜூன் மாதத்தில் வரும் முஹர்ரம், செப்டம்பர் மாதத்தில் வரும் விநாயகர் சதுர்த்தி, அக்டோபர் மாதத்தில் வரும் காந்தி ஜெயந்தி மற்றும் தசரா, நவம்பர் மாதத்தில் வரும் தீபாவளி மற்றும் குருநானக் ஜெயந்தி, மற்றும் டிசம்பர் மாதத்தில் வரும் கிறிஸ்துமஸ் தினம் ஆகிய நாட்களில் வர்த்தகம் மூடப்பட்டிருக்கும்.
மல்டி கமாடிட்டி சந்தையைப் பொறுத்தவரை, மகாவீர் ஜெயந்தி அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பல்வகை பண்டப் பரிவர்த்தனை நிலையம் (MCX) மூடப்பட்டிருக்கும். ஆனால், மாலை 5 மணி முதல் காலை 11:30 மணி வரை மாலை அமர்வில் வர்த்தகம் மீண்டும் தொடங்கும். புனித வெள்ளியன்று, MCX நாள் முழுவதும் மூடப்பட்டிருக்கும், அதாவது காலை மற்றும் மாலை அமர்வுகள் இரண்டிலும் வர்த்தகம் இருக்காது.மேலும், மகாவீர் ஜெயந்தி மற்றும் புனித வெள்ளி ஆகிய இரு நாட்களிலும் (NCDEX) முழுமையாக மூடப்பட்டிருக்கும்.