மதுரை காமராஜர் பல்கலைக் கழக விடுதியில் மாணவி தற்கொலை!

மதுரை காமராஜர் பல்கலைக் கழக விடுதியில் மாணவி தற்கொலை!

மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் பயிலும் மாணவி ஒருவர் பல்கலைக்கழக வளாகத்தில் இருக்கும் விடுதியின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டார்.

மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் முதுகலை இரண்டாம் ஆண்டு படிக்கும் 25 வயது இளம்பெண் ஒருவர் தனது விடுதி கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் இருந்து குதித்ததாக கூறப்படுகிறது. வியாழன் இரவு 11.15 மணியளவில் இளம்பெண் தனது கைத்தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்த போது இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

அவர் தேனி மாவட்டம் மயிலாடும்பாறை தாலுக்கா குப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்த மகேஸ்வரி(25) என்பது தெரியவந்தது. கீழே விழுந்ததில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மாடியில் இருந்து விழுந்த இளம்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு மற்ற விடுதி மாணவிகள் விரைந்து வந்து அவருக்கு உதவி செய்தனர். உடனடியாக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், வெள்ளிக்கிழமை காலை 7.50 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மாணவியின் மரணத்துக்கான காரணம் தெரியவில்லை. அது குறித்து காவல்துறை விசாரித்து வருகிறது. தற்போது இறந்த மாணவியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருப்பதாகத் தகவல்.

இச்சம்பவம் குறித்து நாகமலை புதுக்கோட்டை போலீசார் 174 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை எண்ணம் உள்ளவர்கள் அதிலிருந்து தங்களை மீட்டுக்கொள்ள தமிழக அரசின் சுகாதார உதவி எண் 104 மற்றும் சினேகா தற்கொலை தடுப்பு ஹெல்ப்லைன் எண் 044-24640050 ஆகியவற்றைத் தொடர்பு கொண்டு வேண்டிய மனநல ஆலோசனைகளைப் பெறலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com