உச்ச நீதிமன்றத்தின் அசத்தலான உத்தரவு! : வாகனத்தின் ஆயுட்காலம் முடிந்துவிட்டது என்ற கவலை இனி வேண்டாம்!

வாகனத்தின் ஆயுட்காலம் முடிந்துவிட்டது என்று இனி கவலைப்பட வேண்டாம். உச்ச நீதிமன்றம், பழைய வாகன உரிமையாளர்களுக்கு ஒரு தற்காலிக பாதுகாப்பு வளையத்தை உருவாக்கியுள்ளது.
End-of-Life Vehicles (ELVs)
End-of-Life Vehicles
Published on

சொந்த வாகனத்தை மட்டுமே நம்பி வாழ்க்கையை ஓட்டி வரும் பொதுமக்களுக்கு ஒரு அட்டகாசமான செய்தி!

வாகனத்தின் ஆயுட்காலம் முடிந்துவிட்டது என்று இனி கவலைப்பட வேண்டாம். உச்ச நீதிமன்றம், பழைய வாகன உரிமையாளர்களுக்கு ஒரு தற்காலிக பாதுகாப்பு வளையத்தை உருவாக்கியுள்ளது.

ஆம்! டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், 10 ஆண்டுகள் பழைய டீசல் வாகனங்கள் மற்றும் 15 ஆண்டுகள் பழைய பெட்ரோல் வாகனங்கள் இனி தாராளமாக இயக்கப்படலாம்.

இந்த வாகனங்களின் உரிமையாளர்கள் மீது எந்தவிதமான கட்டாய நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாக ஒரு இடைக்கால உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இது ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம்!

IANS அளித்த தகவலின்படி, உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு, டெல்லி அரசு தாக்கல் செய்த ஒரு மனுவை விசாரித்தது.

அந்த மனுவில், பழைய வாகனங்கள் மீதான தடையால் மக்கள் படும் சிரமங்கள் பற்றியும், இந்தத் தடை உண்மையிலேயே காற்று மாசைக் குறைக்க உதவுகிறதா என்பது பற்றியும் கேள்வி எழுப்பப்பட்டது.

டெல்லி அரசின் வாதத்தைக் கேட்ட உச்ச நீதிமன்றம், "அப்பாடா, இனி நிம்மதியாக இருக்கலாம்" என்று சொல்லும் அளவுக்கு ஒரு முக்கிய உத்தரவைப் பிறப்பித்தது.

நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்பிய உச்ச நீதிமன்றம், அதுவரை பழைய வாகனங்களை வைத்திருக்கும் உரிமையாளர்கள் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று தெளிவாகக் கூறியுள்ளது.

நடுத்தர வர்க்கத்தினருக்கு கிடைத்த வெற்றி!

"வாகனத்தின் வயதை மட்டும் பார்த்து தடை போடுவது நியாயமில்லை"

டெல்லி அரசின் இந்த மனு, "வாகனத்தின் வயதை மட்டும் பார்த்து தடை போடுவது நியாயமில்லை" என்று அழுத்தமாக வாதிட்டது. 

நன்றாகப் பராமரிக்கப்பட்டு, மாசு உமிழ்வு சோதனைகளில் தேர்ச்சி பெறும் வாகனங்கள், ஏன் வயது காரணமாக தடை செய்யப்பட வேண்டும்? என்று கேட்டது. 

இது, தினமும் தங்கள் வாகனத்தை நம்பி வேலைக்குச் செல்லும், வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் லட்சக்கணக்கான மக்களுக்கு கிடைத்த ஒரு பெரிய வெற்றி!

இந்தத் தடை, முறையாகப் பராமரிக்கப்படும், குறைந்த பயன்பாட்டில் உள்ள வாகனங்களையும், அதிக மாசு ஏற்படுத்தும் வாகனங்களையும் ஒரே மாதிரியாகப் பார்த்தது. 

ஆனால், உச்ச நீதிமன்றத்தின் இந்த புதிய இடைக்கால உத்தரவு, அந்த அநீதிக்கு ஒரு தற்காலிக முற்றுப்புள்ளி வைத்துள்ளது.எனவே, பழைய வாகனங்களை வைத்திருப்போரே, சந்தோஷமாக இருங்கள்! 

இதையும் படியுங்கள்:
மக்களே உஷார்..! இனி டோல் கட்டண நிலுவை இருந்தால்.. இன்சூரன்ஸ், ஆர்சி ரினீவல் பண்ண முடியாது..!
End-of-Life Vehicles (ELVs)

உங்கள் வாகனங்களுக்கு உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால பாதுகாப்பு கிடைத்துவிட்டது. இது ஒரு நிரந்தரத் தீர்வுக்கான முதல் படி. விரைவில் ஒரு நல்ல முடிவு வரும் என்று நம்பலாம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com