

பொங்கல் பண்டிகையையொட்டி, ஜல்லிக்கட்டு போட்டிகளை பாதுகாப்பாக நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழ்நாடு அரசு.
கால்நடை பராமரிப்புத் துறை செயலா் சுப்பையன் அனைத்து மாவட்ட ஆட்சியா்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் :
மாவட்ட ஆட்சியா்களிடம் முன்கூட்டியே அனுமதி பெறாமல் ஜல்லிக்கட்டு உள்பட எந்த போட்டிகளையும் நடத்தக் கூடாது.
விலங்கு வதை தடுப்புச் சட்ட விதிகளுக்கு இணங்க போட்டிகளை நடத்த அனுமதி வழங்க வேண்டும். முன்கூட்டியே அறிவிப்பு வெளியிடாமல் எந்த போட்டியும் நடத்த ஒப்புதல் அளிக்கக் கூடாது.
விலங்கு வதை தடுப்பு சட்டத்தின் விதிகளில் குறிப்பிட்டுள்ளபடி காளைகள் மற்றும் கால்நடைகளுக்கு எந்த விதமான தீங்கும் ஏற்படாத வகையில் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும். காளைகள் துன்புறுத்தப்படாமல் இருப்பதையும், பாதுகாப்பாக இருப்பதையும் உறுதி செய்வது அவசியம்.
ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்காக அதில் தொடா்புடைய துறைகள் அனைத்திலும் அதிகாரப்பூா்வ குழுக்கள் முன்கூட்டியே அமைக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த போட்டிகளில் தொடா்புடைய அனைத்து தரப்பினருக்கும் அதுதொடா்பான விழிப்புணா்வையும், புரிதலையும் ஏற்படுத்துவது முக்கியம்.
ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதற்கு முன்னதாகவே அனைத்து ஏற்பாடுகளையும் முழுமையாக செய்திருக்க வேண்டும். மேலும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான விண்ணப்பங்கள் அனைத்தும் இணைய வழியில் மட்டுமே அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்கும் போதே காப்பீட்டு ஆவணங்களை சமா்ப்பிக்க அறிவுறுத்துவது அவசியம்.
போட்டி நடைபெறுவதற்கு முன்னதாகவே அனைத்து ஏற்பாடுகளையும் முழுமையாக செய்திருக்க வேண்டும். ஜல்லிக்கட்டுக்கு தொடா்பு இல்லாத இடங்களில் அத்தகைய போட்டிகள் நடத்தக் கோரி சமா்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படமாட்டாது.
தேவையற்ற குழப்பங்கள், தவறுகளைத் தவிா்க்கவும், ஒழுங்குமுறையுடன் போட்டிகளை நடத்தவும், விதிகளை சரிபாா்க்கும் பட்டியலின்படி செயல்படுதல் வேண்டும்.
போட்டி களத்திலிருந்து காளைகள் வெளியேறும் இடத்தில் கால்நடை மருத்துவக் குழுக்கள் தயாா் நிலையில் இருத்தல் அவசியம்.
தேவைப்படும் காளைகளுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சைகளை அவா்கள் வழங்க வேண்டும்.
அதேபோன்று, போட்டி களத்துக்குள் பாா்வையாளா்களும், வெளி நபா்களும், வீரா்கள் அல்லாத பிறரும் இருக்க அனுமதியில்லை. அதனை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு காவல்துறைக்கு உள்ளது.
இதேபோன்ற வழிகாட்டு நெறிமுறைகள் வடமாடு, மஞ்சு விரட்டு, எருது விடும் நிகழ்ச்சிகளுக்கும் பொருந்தும். இவற்றை பின்பற்றி போட்டிகளை நடத்த வேண்டும் என்று அந்த வழிகாட்டுதல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.