போக்குவரத்து விதிகளை மீறியதாக, நடிகர் விஜய்க்கு சென்னை காவல்துறையினர் மீண்டும் அபராதம் விதித்துள்ளனர்.
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என எதிர்பார்ப்பு கிளம்பிய நிலையில் அவர் அரசியலுக்கு வருவது உறுதியாகிவிட்டது. சமீபத்தில் தான் அவர் சினிமாவில் இருந்து சிறிது ஆண்டுகள் ஓய்வு பெற போவதாக அறிவித்தார்.
இந்த நிலையில், சென்னை பனையூரில் நேற்று நடிகர் விஜய், மாவட்ட வாரியாக உள்ள விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். அரசியல் வருவது குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. ரசிகர்கள் விஜய்யின் அரசியல் பிரவேசத்தை எதிர்நோக்கி காத்து கொண்டிருக்கும் நிலையில், விஜய்க்கு திடீரென ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நேற்று ஆலோசனை கூட்டம் முடிந்து சென்னை அக்கரை சந்திப்பில் நடிகர் விஜய் சென்ற கார், சிவப்பு சிக்னலை மதிக்காமல் சென்றுள்ளது. இதுதொடர்பான காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகின.
அதை அடிப்படையாகக் கொண்டு, விஜயின் காருக்கு சென்னை போக்குவரத்து காவல்துறையினர் 500 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.
சென்னை பனையூரில் நேற்று நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்திற்கு விஜய் வந்தபோது, போக்குவரத்து சிக்னலை மீறியுள்ளார். விஜயின் இதே வாகனத்தில் விதிகளை மீறி கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்ததாக புகார் எழுந்த நிலையில் கடந்த ஆண்டு, காவல்துறையினர் 500 ரூபாய் அபராதம் விதித்திருந்தனர்.