பூமிக்கு இது நல்ல சகுனமா?10 மைல் தூரத்திற்கு மின்னிய மின்னல்..!

இது வெறும் மின்னல் அல்ல, வானத்தில் இருந்து வந்த ஒரு ரகசியச் செய்தி! கடந்த சில நாட்களாக, நியூயார்க்கின் லாங் தீவில் வானில் தோன்றிய ஒரு மர்மமான மின்னல், சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Lightning bolt over a suburban neighbourhood
A long, horizontal lightning bolt over houses.
Published on

ஒரு முன்னாள் தீயணைப்பு வீரர் தனது வீட்டில் இருந்தபோது இந்த மின்னல் வீடியோவை எடுத்தார். அப்போது ஏற்பட்ட மற்றொரு மின்னல் தாக்கியதில் அவரது வீடே பயங்கரமாகக் குலுங்கியதாக அவர் கூறியது, அந்தச் சம்பவத்தின் தீவிரத்தை உணர்த்துகிறது.

இந்த மின்னல் சாதாரண மின்னலைப் போல இல்லாமல், கிட்டத்தட்ட 10 மைல் தூரத்திற்குப் பரவி, வானத்தையே பிரகாசமாக்கியுள்ளது. 

இந்த அதிர்ச்சிகரமான காட்சியைப் படம்பிடித்தவர், ஓய்வுபெற்ற தீயணைப்பு வீரரான கென்னி கந்தர். 

தனது வீட்டில் இருந்தபோது இந்த மின்னலைப் பதிவு செய்த அவர், இந்த மின்னல் தாக்கியபோது தனது வீடே பயங்கரமாகக் குலுங்கியதாகக் கூறியுள்ளார். 

"இதுவரை நான் லாங் தீவில் இப்படி ஒரு மின்னலைப் பார்த்ததில்லை" என்று அவர் ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். 

இந்த மின்னலின் விசித்திரமான தோற்றம், விஞ்ஞானிகளையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பொதுவாக, மின்னல்கள் செங்குத்தாகவே காணப்படும். 

ஆனால், இது கிடைமட்டமாக 10 மைல் தூரத்திற்குப் பரவியுள்ளது. "இது பூமிக்கு ஒரு நல்ல சகுனம் அல்ல," என்று பல விண்வெளி ஆய்வு மையங்கள் கவலை தெரிவித்துள்ளன. 

இந்த மின்னலுக்கும், சமீபத்தில் விண்வெளியில் ஏற்பட்ட சில மாற்றங்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என சில நிபுணர்கள் கருதுகின்றனர். 

இந்த நிகழ்வு, பூமிக்கு விண்வெளியில் இருந்து வரும் ஒரு எச்சரிக்கையாகவும் இருக்கலாம் என்று சமூக வலைதளங்களில் பலர் விவாதித்து வருகின்றனர். 

இந்த மர்மமான மின்னல், பூமிக்கு என்ன சொல்ல வருகிறது என்பது விரைவில் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நியூயார்க் போஸ்ட் இதழின்படி, கென்னி கந்தர் தனது வீட்டில் இருந்தபோதுதான் இந்த ஆச்சரியமான சம்பவம் நடந்தது. 

ஒரு மின்னல் தாக்கியபோது, திடீரென வீடு முழுவதும் பயங்கரமாகக் குலுங்குவதை அவர் உணர்ந்துள்ளார். 

என்ன நடக்கிறது என்று பார்ப்பதற்காக, தனது ஜன்னலுக்கு வெளியே மின்னல் ஒளி வந்த திசையைப் பார்த்துள்ளார்.

உடனடியாக, தனது ஐபோனை எடுத்து, படுக்கையறையில் இருந்த ஜன்னல் ஓரத்தில் வைத்து, அகலமான கோணத்தில் வீடியோ எடுக்கத் தொடங்கினார். 

அனைத்து விளக்குகளையும் அணைத்துவிட்டு, அமைதியாகக் காத்திருந்தார். 

திடீரென அந்த ராட்சத மின்னல் தோன்றியதைக் கண்டதும், "அடடா, நான் இதைப் படமெடுத்துவிட்டேன்" என்று ஆச்சரியத்துடன் கூறியுள்ளார். 

பின்னர், வீடியோவைப் போட்டுப் பார்த்தபோது, "நம்பவே முடியவில்லை, இது மிகவும் அற்புதம்" என்று வியந்துள்ளார்.

இந்த மின்னல் அவ்வளவு நீளமாக இருந்ததால், அதை முழுவதுமாகப் படம்பிடிக்க முடியவில்லை என்று கென்னி கந்தர் கூறியுள்ளார். 

"அது எனது கேமராவின் எல்லைக்கு அப்பால் சென்றுவிட்டது. அந்த மின்னல் குறைந்தபட்சம் 10 மைல் தூரம் இருந்திருக்கும்" என்று வியப்புடன் தெரிவித்துள்ளார். 

"இந்த மின்னல் பெரிய சத்தம் எதுவும் எழுப்பவில்லை. ஆனால் இதற்கு முன் வந்த ஒரு மின்னல், என் வீடே குலுங்கும் அளவுக்கு சத்தம் போட்டது" என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த மின்னல் சமூக வலைதளங்களில் பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஒரு பயனர், "ஹோல்ட்ஸ்வில்லில் நான் பார்த்த மின்னலும் இதேபோல்தான் இருந்தது. கிடைமட்டமாக இருந்தது" என்று கூறியுள்ளார். 

மற்றொருவர், "நான் என் வாழ்வில் பார்த்ததிலேயே இதுதான் மிகவும் விசித்திரமான விஷயம். அது ஒரே இடத்தில் மின்னாமல், வானத்தின் இருண்ட பகுதியிலும் பரவி ஒளிர்ந்தது" என்று ஆச்சரியப்பட்டுள்ளார்.

மூன்றாவது பயனர் ஒருவர், "என் வீடே ஒளிர்ந்தது. ஒரு அணு ஆயுதத் தாக்குதல் நடந்தது என்று நினைத்தேன். என்ன செய்வது என்று தெரியவில்லை" என்று தனது பீதியைப் பதிவு செய்துள்ளார். 

இதையும் படியுங்கள்:
டெல்லியை சூழ்ந்த கனமழை: ரெட் அலர்ட் அறிவிப்பு..!
Lightning bolt over a suburban neighbourhood

ஒரு சமூக வலைதளப் பயனர், "இது பூமிக்கு ஒரு நல்ல அறிகுறி அல்ல என்று நான் நினைக்கிறேன்" என்று கவலை தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com