

திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடு மற்றும் அவருக்கு சொந்தமான 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் காலை முதலே சோதனை நடத்தி வருகின்றனர். குடிநீர் வழங்கல் துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் டெண்டர் முறைகேடுகள் தொடர்பாக இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னை மயிலாப்பூரில் இருக்கும் கே.என்.நேரு இல்லத்தில் 10 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத் துறை குழு அதிரடி ரெய்டில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் திருச்சி தில்லை நகரில் உள்ள அவரது வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
திருச்சியில் உள்ள கே.என்.நேரு வீட்டில் சோதனை நடைபெற்று வரும் சூழலில், முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவரது இல்லத்திற்கு வந்துள்ளார். மேலும் அவருடன் திமுக நிர்வாகிகள் பலரும் வருகை தந்துள்ளனர். சோதனை நடைபெற்று வரும் சூழலில் கே.என்.நேரு வீட்டில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
சென்னையில் கே.என்.நேரு வீடு, அவருடைய சகோதரர் ரவிச்சந்திரன் வீடு மற்றும் அடையாறு, திருவான்மியூர், ஆர்.ஏ.புரம் மற்றும் அண்ணா நகர் உள்ளிட்ட 10 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.