இந்தியாவில் பொருளாதார மந்தநிலை ஏற்படாது: நிதி ஆயோக் முன்னாள் துணைத்தலைவர்!

இந்தியா பொருளாதாரம்
இந்தியா பொருளாதாரம்
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

உலகின் பல நாடுகளும் பொருளாதார மந்தநிலையை நோக்கி நகர்ந்து வரும் சூழ்நிலையில், இந்தியா அடுத்த நிதியாண்டில் 6-7 சதவீத பொருளாதார வளர்ச்சியை தக்க வைக்கும் என நிதி ஆயோக் அமைப்பின் முன்னாள் துணைத் தலைவர் ராஜீவ் குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 இதுகுறித்து அவர் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த நேர்காணலில் கூறியதாவது.

 இந்தியாவில் மந்தநிலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் எதுவும் இல்லை. சர்வதேச நிலவரங்களால் நமது நாட்டுக்கு பெரிய அளவில் பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. இன்னும் சொல்லப் போனால், அடுத்த நிதியாண்டில் நமது பொருளாதாரம் 6% முதல் 7% வரையிலான வளர்ச்சியை தக்க வைக்கும்.

அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகளில் பின்னடைவு காணப்படுகிறது. இது அடுத்து வரும் சில மாதங்களில் உலக பொருளாதாரத்தை மந்தநிலைக்கு இட்டுச் செல்லும்.

பணவீக்கத்தைப் பொறுத்த வரை உச்சகட்டத்தை அடைந்து படிப்படியாக குறையும் என்பதே எனது கணிப்பு. சில்லறைப் பண வீக்கத்தைப் பொறுத்த வரையில் அது 6-7% அளவிலேயே இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

 உலக வங்கி கடந்த அக்டோபர் 6-ல் வெளியிட்ட மதிப்பீட்டில் அடுத்த நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி 6.5% ஆக இருக்கும் என தெரிவித்தது குறிப்பிடத் தக்கது.

logo
Kalki Online
kalkionline.com