திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா தேர்தல் முன்னணி நிலவரம்!

திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா தேர்தல் முன்னணி நிலவரம்!

வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய 3 மாநில சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. இந்த மூன்று தேர்தல்களுக்கும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று மாலைக்குள் 3 மாநில சட்டசபை தேர்தலிலும், இடைத்தேர்தலைச் சந்தித்த 5 மாநிலங்களின் 6 சட்டசபை தொகுதி தேர்தல்களிலும் முடிவுகள் அறிவிக்கப்படும்.

திரிபுரா மற்றும் நாகலாந்து மாநிலங்களில் பிஜேபி முன்னிலையில் உள்ளது. மேகாலயாவில் என்.பி.பி. முன்னிலையில் உள்ளது.காலை 9 மணிக்கு பிறகு முன்னணி நிலவரம் வெளியாகத் தொடங்கியது. 9. மணி நிலவரப்படி திரிபுரா மாநிலத்தில் 32 தொகுதிகளில் இடதுசாரி கட்சி முன்னிலையில் உள்ளது.

நாகாலாந்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி-பா.ஜ.க. கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை பெற்றது. பா.ஜ.க. கூட்டணியும் இடதுசாரியை நெருங்கி வருகிறது. இந்த கூட்டணி 24 தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது.

பாஜக
பாஜக

மேகாலயாவில் காங்கிரஸ் 18 தொதிகளிலும், என்பிபி 10 தொகுகளிலும், பா.ஜ.க. 3 தொகுதிகளிலும் முன்னிலையில் இருந்தன. பா.ஜ.க. 3 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தது.

இதில் 60 தொகுதிகளை கொண்ட திரிபுராவுக்கு கடந்த 16ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. அதேபோன்று 60 தொகுதிகளை கொண்ட மேகாலயா, நாகாலாந்து மாநில சட்டப் பேரவைகளுக்கும் ஒரே கட்டமாக 27ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருந்தது. ஆனால் மேகாலயாவில், சோஹியாங் தொகுதியில் ஐக்கிய ஜனநாயக கட்சி வேட்பாளர் டான்குபார் ராய் லிங்டோ மறைவால் தேர்தல் ஒத்தி போடப்பட்டதால் எஞ்சிய 59 தொகுதிகளில் மட்டும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

நாகாலாந்தில், அகுலுட்டோ தொகுதியில், தற்போதைய எம்.எல்.ஏ. காஜெட்டோ கினிமி, போட்டியின்றி தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். எனவே 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. திரிபுராவில் 90 சதவீதமும், மேகாலயாவில் 85 சதவீதமும், நாகாலாந்தில் 84 சதவீதமும் வாக்குகள் பதிவாகின. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடை பெற்று வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com